""எதிர் வீடு வரை போய் வரேன்''
""எதுக்கு?''
""சண்டையை வேடிக்கை பார்க்க அட்வான்ஸ் புக்கிங் பண்ணிட்டு வரத்தான்''
ஏ. நாகராஜன்,
பம்மல்.
அவர்: அந்த நடிகை சினிமால நடிக்க
வர்றதுக்கு முன்னாடி கிழிஞ்ச புடவை கட்டினு இருந்தாங்க .
இவர்: இப்ப?
அவர்: இப்ப அது கூட இல்லை.
தீபிகா சாரதி,
சென்னை 5.
நடத்துநர்: உனக்கு யாரும்மா டிக்கெட் வாங்கறது?
பெண்: பின்னால மாஸ்க் போட்டிருப்பார் பாருங்க...
நடத்துநர்: ஏம்மா எல்லாரும் மாஸ்க்கை முன்னாலதானே போடுவாங்க. அவர் ஏம்மா பின்னால போடுறாரு?
டீ. என். பாலகிருஷ்ணன்,
சென்னை- 91.
""ஆபீசுக்கு போன் பண்ணினா நீ ஊருக்குப் போயிருக்கிற விஷயத்தை யார் கிட்டேயும் சொல்லிடாதே''
""ஏங்க?''
""நீ ஊருக்குப் போனது தெரிஞ்சிட்டா, உடனே ஆபீஸ்ல எல்லாரும் பார்ட்டி கேட்பாங்க!''
அவள் (தன் கணவனைப் பற்றி): அந்தாளு நாய் மாதிரி கத்துவாரு, நரி மாதிரி ஊளையிடுவாரு,
குதிரை மாதிரி கனைப்பாரு, புலி மாதிரி உருமுவாரு, சிங்கம் மாதிரி கர்ஜிப்பாருடீ.
இவள்:ஆக, உன் புருசன், மனுசனே இல்லைனு சொல்ல வர்றே; அதானே''
""உங்க கணவரை டிஸ்சார்ஜ் பண்ணி அழைச்சிட்டுப் போகணும்னா ஒரு கண்டிஷன்...அவருக்கு எந்த வேலையும் கொடுக்காமல் ரெஸ்ட்டுல இருக்கணும்!''
""அப்படி சொல்லச் சொன்னாரா டாக்டர்?''
வி.ரேவதி,
தஞ் சை.