(திருநெல்வேலியில் ஒரு பலசரக்குக்கடையின் பெயர்)
அண்ணன் தம்பி பலசரக்குக் கடை
-ஆர்.மகாதேவன்,
திருநெல்வேலி.
(பொறையாரில் உள்ள ஒருபள்ளியில்...)
முயலும் ஜெயிக்கும் ஆமையும் ஜெயிக்கும். ஒருபோதும் முயலாமை ஜெயிக்காது.
-சரஸ்வதி செந்தில்,
பொறையார்.
(நன்னிலம்- கும்பகோணம் நெடுஞ்சாலையில் ஓர் ஊரின் பெயர்)
வாழ்க்கை
- க.இளங்கோவன்,
நன்னிலம்.
(திருவாரூர் பேருந்து நிலையத்தில் நண்பர்கள் இருவர்)
""மச்சி.. மாமியார்கிட்ட சீர்வரிசை கேட்டதுதப்பாப் போச்சு..''
""ஏன்.
உனக்குப் பொண்ணு கொடுத்ததே அதிகமுன்னு நோஸ் கட் பண்ணிட்டாங்க..!''
-ஏ.மூர்த்தி,
திருவள்ளூர்.
(மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே நண்பர்கள் பேசியது)
""அண்ணே.. வாயைத் திறங்களேன்.. ஒரு சந்தோஷமான செய்தி!''
""சந்தோஷமான செய்தி சொல்ல நீதானே வாயை திறக்கணும். என்ன ஏன்யா திறக்கச் சொல்றே..!''
-ப.செந்தில்குமார்,
மயிலாடுதுறை.
(நாகர்கோவில் டீக் கடை ஒன்றில்வாடிக்கையாளரும், டீ மாஸ்டரும்)
""மாஸ்டர்.. டீ ஒண்ணு போடுங்க..!''
""ஆமாம். காசு தறாதீங்க.. டீ மட்டும் சவுண்டு போட்டு கேளுங்க.. இனி உங்க சாக்கு போக்கு இங்க வேகாது''
""ஏன் அடுப்பை வித்துட்டீங்களா...?''
-மகேஷ் அப்பாசுவாமி,
பனங்கொட்டான்விளை.
யோசிக்கிறாங்கப்பா!
பணத்துக்குத் தெரிந்த ஒரே மொழி- இன்று நீ என்னைக் காப்பாற்றி வைத்தால் நாளை உன்னை நான் காப்பாற்றி வைப்பேன்.
-பத்மா சாரதி,
தஞ்சாவூர்.
மைக்ரோ கதை
""நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க கரண். எங்க அப்பா- அம்மா கூட, அந்தக் காலத்துல லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டவங்கதான். அதனால நாம பயப்படத் தேவையில்லை. கண்டிப்பா, நம்ம காதலுக்கு ஒத்துக்குவாங்க..'' என்று தன் காதலனிடம் உறுதியாகக் கூறிவிட்டு வீட்டுக்கு வந்தாள் கல்பனா. அப்போது, சமையலறையிலிருந்து வந்த அம்மாவின் குரல் தெளிவாகக் கேட்டது.
"" நாம ரெண்டு பேரும் காதல் கல்யாணம் பண்ணிகிட்டோம்ன்னுதான் பேரு. ஆனா... தினமொரு சண்டை. தினமொரு பஞ்சாயத்து. அப்பப்பா... நானும் நிம்மதியா இல்ல. நீங்களும் சந்தோஷமா இல்லை. இதுக்கு... உங்க மேல, அந்தக் கருமாந்திரம் புடிச்ச காதல் வராமலேயே இருந்திருக்கலாம். ஐயோ..கடவுளே! நான் அவசரப்பட்டு பண்ண அந்தத் தப்பை என் பொண்ணு மட்டும் செஞ்சுடக்கூடாதுடா கடவுளே!''
கல்பனாவுக்குத் தலைசுற்றியது.
-புதுவைப் பிரபா
எல்லா இடங்களிலும் பணிந்து போகாதீர்கள்.
புதைத்துவிடுவார்கள் பிணம் என்று நினைத்து!
-ந.சண்முகம்,
திருவண்ணாமலை.
பயன்பாட்டாளர்களைத் தக்கவைக்க வாட்ஸ் ஆப் அவ்வப்போது புதிது புதிதாய் சேவைகளை அறிவித்து வருகிறது. ஒரு குழுவில் 256 பேரை மட்டுமே இணைக்க முடியும் என்ற எண்ணிக்கையை தற்போது இரு மடங்காக்கியுள்ளது வாட்ஸ் ஆப்.
ஆம், ஒரே குழுவில் 512 பேரை நீங்கள் இணைத்துக் கொள்ளலாம். இந்தப் புதிய சேவை அனைவருக்கும் செயல்பட தொடங்கி உள்ளது.
இந்தப் புதிய சேவையைப் பெற உங்கள் வாட்ஸ்ஆப் கணக்கில் சென்று வலது மேற்பகுதியில் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்து நியூ குரூப்-பை தேர்வு செய்ய வேண்டும். இந்தப் புதிய குழுவில் நீங்கள் 512 பேரை இணைக்கலாம்.
இந்தப் புதிய குழுவில் குறிப்பிட்ட நாள்களுக்குள் தானாக அழியும் தகவல் சேவையையும் பயன்படுத்தலாம். இந்தப் புதிய சேவையை உங்கள் கைப்பேசியில் தெரியவில்லை என்றால் உங்கள் வாட்ஸ் ஆப்பை அப்டேட் செய்தால் போதும்.
வாட்ஸ் ஆப்புக்கு போட்டியாக உள்ள டெலிகிராம் ஆப்பில் ஒரு குழுவில் 2 லட்சம் பேர் வரை சேர்க்கும் சேவை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் பெரிய அளவிலான பைல்ஸ்களையும் அனுப்பும் வசதியும் உள்ளது. ஆனால், வாட்ஸ் ஆப் இப்போதுதான் ஒரு குழுவில் 512 பேரை இணைக்கும் சேவையையும், 2 ஜிபி பைல்களை அனுப்பும் சேவையையும் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-அ.சர்ப்ராஸ்