சிரி...சிரி...

"இந்த மாணவனோட  அப்பா பெரிய ரவுடின்னு நினைக்கிறேன்"" எப்படி சொல்றீங்க ஐயா?"" "பொருள்' கூறுக வினாவுக்கு  "கத்தி, வீச்சு, அருவாள்' னு பதில் எழுதியிருக்கானே?"
சிரி...சிரி...


"இந்த மாணவனோட  அப்பா பெரிய ரவுடின்னு நினைக்கிறேன்"
" எப்படி சொல்றீங்க ஐயா?"
" "பொருள்' கூறுக வினாவுக்கு  "கத்தி, வீச்சு, அருவாள்' னு பதில் எழுதியிருக்கானே?"

புதுவண்டி ரவீந்திரன்,
சோளிங்கர்.

"தலைவர் என்ன மூடுல இருந்தார்னு தெரியலை!"
 "என்ன விஷயம்...?"
" இரட்டைக் குழந்தைகளுக்கு, "லஞ்சக்குமார், லாவண்யக் குமார்' னு பேர் வச்சு அனுப்பிட்டாரே!"

-வி. ரேவதி,
தஞ்சை.

பெண் : (பிச்சைக்காரனிடம் ) "எங்க வீட்டு ஐயா தோத்ததுக்கு நீ ஏம்ப்பா 
கவலைப் படறே..?!"
பிச்சைக்காரன் :  "அவருக்கு தேர்தல் செலவுக்கு நான் அஞ்சு லட்சம் ரூபாய் கடன் குடுத்தேன் மேடம் "

துடுப்பதி வெங்கண்ணா,
பெருந்துறை

"பொண்ணுக்கு சிலம்பாட்டம் தெரியும்தான் அதுக்காக பொண்ணு பார்க்க வரும்போது சிலம்பாட்டம் ஆடிக்கிட்டே வரணுமா? "
"பாடத்தெரியும்னு சொன்னா மட்டும் பாடிக் காமின்னு கேட்கறீங்க இல்லே "

மு. மதிவாணன்,
அரூர் 

என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா உங்களோட எல்லா துக்கத்துலயும் நான் பங்கெடுத்துகுவேன்ங்க...
சந்தோஷம் டார்லிங்... ஆனா எனக்கு ஒரு பிரச்னையும் இப்ப இல்லையே!
என்னை நீங்க இன்னும் கல்யாணம் பண்ணிக்கவே இல்லையே!

உலகத்துலயே பெரிய ஏமாற்றம் எது தெரியுமா ?
எதுன்னு நீயே சொல்லு...
செல்போன சார்ஜர்ல போட்டுட்டு.. சுவிட்ச் போடாமல் 2 மணி நேரம் கழிச்சு போய் பார்க்கிறது தான் !

எம். ஏ. நிவேதா,
அரவக்குறிச்சிப்பட்டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com