"இந்த மாணவனோட அப்பா பெரிய ரவுடின்னு நினைக்கிறேன்"
" எப்படி சொல்றீங்க ஐயா?"
" "பொருள்' கூறுக வினாவுக்கு "கத்தி, வீச்சு, அருவாள்' னு பதில் எழுதியிருக்கானே?"
புதுவண்டி ரவீந்திரன்,
சோளிங்கர்.
"தலைவர் என்ன மூடுல இருந்தார்னு தெரியலை!"
"என்ன விஷயம்...?"
" இரட்டைக் குழந்தைகளுக்கு, "லஞ்சக்குமார், லாவண்யக் குமார்' னு பேர் வச்சு அனுப்பிட்டாரே!"
-வி. ரேவதி,
தஞ்சை.
பெண் : (பிச்சைக்காரனிடம் ) "எங்க வீட்டு ஐயா தோத்ததுக்கு நீ ஏம்ப்பா
கவலைப் படறே..?!"
பிச்சைக்காரன் : "அவருக்கு தேர்தல் செலவுக்கு நான் அஞ்சு லட்சம் ரூபாய் கடன் குடுத்தேன் மேடம் "
துடுப்பதி வெங்கண்ணா,
பெருந்துறை
"பொண்ணுக்கு சிலம்பாட்டம் தெரியும்தான் அதுக்காக பொண்ணு பார்க்க வரும்போது சிலம்பாட்டம் ஆடிக்கிட்டே வரணுமா? "
"பாடத்தெரியும்னு சொன்னா மட்டும் பாடிக் காமின்னு கேட்கறீங்க இல்லே "
மு. மதிவாணன்,
அரூர்
என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா உங்களோட எல்லா துக்கத்துலயும் நான் பங்கெடுத்துகுவேன்ங்க...
சந்தோஷம் டார்லிங்... ஆனா எனக்கு ஒரு பிரச்னையும் இப்ப இல்லையே!
என்னை நீங்க இன்னும் கல்யாணம் பண்ணிக்கவே இல்லையே!
உலகத்துலயே பெரிய ஏமாற்றம் எது தெரியுமா ?
எதுன்னு நீயே சொல்லு...
செல்போன சார்ஜர்ல போட்டுட்டு.. சுவிட்ச் போடாமல் 2 மணி நேரம் கழிச்சு போய் பார்க்கிறது தான் !
எம். ஏ. நிவேதா,
அரவக்குறிச்சிப்பட்டி.