சிரி... சிரி... 

""உனக்கு காது கேட்க மாட்டேங்குது!''""என்ன பண்றது வயசானாலே கால் வலி வரத்தானே செய்யும்!''""கழுத்து வலின்னா போய் டாக்டரைப் பார்க்க வேண்டியது தானே!''
சிரி... சிரி... 

""உனக்கு காது கேட்க மாட்டேங்குது!''
""என்ன பண்றது வயசானாலே கால் வலி வரத்தானே செய்யும்!''
""கழுத்து வலின்னா போய் டாக்டரைப் பார்க்க வேண்டியது தானே!''

- நா.இரவீந்திரன்,  
வாவிபாளையம். 

""பல் வலிக்கு எதுக்கு கால்நடை டாக்டரிடம் வந்தே..?''
""வலிப்பது சிங்கப் பல் ஆச்சே!''

-எம்.எஸ்.மயில்,
திருநெல்வேலி.

""உங்க ஊரில் பெரிய மேதைகள் யாரும் பிறந்திருக்காங்களா..?''
""ச்சே.. ச்சே.. அப்படியெல்லாம் யாரும் பிறக்கலை.. 
எல்லோருமே குழந்தைகளாகவே பிறந்தாங்க..!''

-ஜி.சுந்தரராஜன், 
திருத்தங்கல்.

""அந்தக் காலத்துல நான் பத்து கிலோ மீட்டர் நடந்தே போய் படித்தேன்டா பேராண்டி..''
""அப்பவே உனக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரமா தாத்தா?''

-கே.இந்து குமரப்பன்,
விழுப்புரம்.

""விடை தெரிஞ்சும் ஏன்டா சொல்லலே..?''
""நான் எதையும் தெரிஞ்ச மாதிரி காமிச்சிக்க மாட்டேன் டீச்சர்..!''

-ஏ.மூர்த்தி,
திருவள்ளூர்.

""கடையில வாங்கின சர்க்கரை எடை ரொம்ப குறைவா இருக்கேடா!''
""வண்டியில கடைக்குப் போறேன்னா கேட்டீங்களா... நடந்தா சர்க்கரை குறையுமுன்னு கடைக்காரர் ஒருத்தர்கிட்டே பேசிக்கிட்டிருந்தார்மா?''

-கே.ஆர்.ஜெயக்கண்ணன்,
கவற்குளம்தேரிவிளை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com