'அந்த கண் டாக்டரிடம் ஏன் இப்போ கூட்டமே வர்றதில்லை..?''
'கூட்டம் வர்றதைப் பார்த்து யாரோ கண் வெச்சிட்டாங்களாம்...''
'டாக்டர் பேஷண்டுக்கு என்ன கொடுக்கலாம்..?''
'பேஷண்டுக்கு ஒண்ணும் கொடுக்க வேண்டாம்.. எனக்குதான் பீஸ் கொடுக்கணும்...''
-வி.சாரதி டேச்சு, சென்னை.
'நடுராத்திரியில் எதுக்கு வந்து கதவைத் தட்டுறே..?''
'டாக்டர்.. எனக்கு தூக்கத்தில் நடக்கிற வியாதிங்க.. நீங்க அதைக் குணப்படுத்துற எக்ஸ்பர்ட்டுன்னு கேள்விப்பட்டு வந்திருக்கேன்..''
-ரத்னம் மரகதம், கோயம்புத்தூர்- 15.
'டாக்டர்.. நீங்க கொடுத்த மருந்து ஞாபக மறதியைப் போக்கலீங்க..?''
'நீதான்பா.. ஞாபக மறதிக்கு மருந்து கேட்டே...?''
-க.வை.ராமகிருஷ்ணன், மல்லூர்.
'டாக்டர்.. பத்து வருஷமா வர்றேன்.. நோயில் எந்த முன்னேற்றமும் இல்லையே..?''
'ஏன் இல்லை.. நான் கார், பங்களா வாங்கிட்டேனே..''
வி.வைத்தியநாதன், சென்னை-78.
'உங்களுக்கு கண் பார்வை மங்கலா தெரியுதா?''
'ஆமா டாக்டர்.. எப்படி சொல்றீங்க?''
'டாக்டர் உள்ளே இருக்காரு.. நான் கம்பவுன்ட்டர்.. போய் பாருங்க?''
-அ.செந்தில்குமார், சூலூர்.
'டாக்டர்.. உடம்பு குறைய என்ன செய்யணும்...''
'தினசரி சைக்கிள் ஓட்டுங்க..''
'அப்போ சீக்கிரம் உடம்பு குறைய ஸ்கூட்டி ஓட்டலாமா?''
-நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.
'டாக்டர்.. எனக்கு அடிக்கடி கழுத்து வலி வருது...?''
'மனைவியைத் தலையில் தூக்கிவைச்சிட்டு ஆடினா.. இப்படிதான்...''
-ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.
'உன் குழந்தைக்கு டாக்டரிடம் பெயர் வைக்கச் சொன்னது தப்பா போச்சா? ஏன்...?''
'பெயரை பேப்பரில் எழுதிக் கொடுத்திட்டு, மெடிக்கல் ஷாப்பில் கேட்டு தெரிஞ்சுக்கச் சொல்றாரு..?''
-எம்.பி.தினேஷ், கோவை-25.
'உங்க மனைவிக்கு கண்ணில் என்ன பிரச்னை..''
'மளிகைக் கடையைப் பார்த்தால்கூட அவங்களுக்கு புடவைக் கடை மாதிரி தெரியுது டாக்டர்..''
-தீபிகா சாரதி, சென்னை-5.
'என்ன... நான் ஒரு மாசத்துக்கு எழுதிய சிரப் பத்து நாளில் காலி ஆயிடுச்சா?''
'ஆமாம் டாக்டர்.. ஃப்ளேவர் நல்லா இருந்ததால், வேளைக்கு ரெண்டு மூடி சேர்த்தே குடிச்சிட்டேன்...''
' நினைவு திரும்பியும் ஏன் கோமாவில் இருக்கிற மாதிரி நடக்கிறீங்க..''
'ஆஸ்பத்திரி பில்லுக்கு பயந்துதான்...''
-அ.ரியாஸ், சேலம்.
'ஆபரேஷன் முடிந்து தையல் போடறதுக்கு முந்தி ஒரு தடவை மானிட்டரில் பார்த்துடுவோம்..''
'எல்லாம் சரியா இருக்கான்னா டாக்டர்..''
'இல்லை... கத்தி, கத்திரி, கிளவுஸ்... எதையாவது உள்ளே வச்சிருக்கோமான்னு..''
'ஞாபக மறதி ரொம்ப ஓவரா இருக்கு டாக்டர்...''
'டோக்கனை கொடுக்க மறந்துட்டீங்களா..?''
'அதில்லை டாக்டர்.. அந்த டோக்கனை எடுத்திட்டு, டீக்கடையில் கொடுத்து டீ கேட்டுட்டேன்...''
-வி.ரேவதி, தஞ்சாவூர்.