சிரி... சிரி...

சிரி... சிரி...

'என்னங்க... தேள் கொட்டினா வலிக்குமா?'
Published on

'என்னங்க... தேள் கொட்டினா வலிக்குமா?''

'இப்போ ஏன் அதை கேக்குறே...?''

'உங்க காலுக்கு அடியில் தேள் இருக்கே... அதான் கேட்டேன்...''

-எஸ்.வேல் அரவிந்த், திண்டுக்கல்.



'உன்னை லவ் பண்ணும்போது இருந்த மாதிரியே இப்பவும் இருக்கியே...?''

'ஏங்க?''

'இப்பவும் பார்க், பீச் கூட்டிட்டு போகணும் சொல்றீயே.. அதான்...''

-ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.



'என்னங்க... அந்த சீரியல் ரொம்ப மோசம்தான்...''

'என்ன ஆச்சு...''

'வயிற்றுல இருக்கிற குழந்தையும்கூட அழுவுதுன்னா பாருங்களேன்...''

-பர்வீன் யூனுஸ், சென்னை.



'ஏங்க.. உங்க பையன் உங்களை மாதிரியே இருக்கான்..''

'எந்த விஷயத்தில்...?''

'எவ்வளவு திட்டினாலும் கோபம் வரமாட்டேங்குது...''

-நா.நாகராஜன், ஊரப்பாக்கம்.



'என்னடி... உங்க அப்பா விளம்பரப் பிரியர்தான் அதுக்காக இப்படியா?''

'என்னங்க ஆச்சு...''

'அவர் கொடுத்த எல்லா பொருள்களிலும் 'உபயம்- உலகநாதன்'-ன்னே எழுதி வைச்சிருக்காரே..?''



'ஸ்டவ் யார் பற்ற வைக்கிறது யாருன்னு எனக்கும், என் மனைவிக்கும் போட்டி...''

'கடைசியில் யார் ஜெயிச்சது...?''

'பத்த வைக்கிறதில் அவுங்களை யாராவது வெல்ல முடியுமா..?''

-எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

'நான் உன்னை ரொம்ப நேசிக்கிறேன்.. நீ இல்லாம என்னால வாழ முடியாது...''

'என்னங்க சரக்கு போட்டு பேசுறீங்களா?''

'இல்லை.. சரக்கோட பேசிக்கிட்டு இருக்கேன்...''



'என் புருஷனுக்கு ஆயுள் நீடிக்க நான் என்ன விரதம் இருக்கணும்...''

'மௌன விரதம் இருந்தாலே போதும்...''

-நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.



'நீங்க பெண்டாட்டியே சுற்றிச் சுற்றி வர்றதா ஒரு பேச்சு இருக்கே...?''

'ஆமா.. அவங்களை நூறு தடவை சுற்றி வந்தால், நாலரை கி.மீ. ஜாகிங் போறதுக்கு ஈடா இருக்குமேன்னுதான்...''



'நான் குடிக்கிறதை விட்டுட்டேன் சரசு...''

'போச்சுடா... காலையிலேயே குடிச்சிட்டு வந்துட்டியா...?''



'ஒரு பாயின்ட்டில்தான் எனக்கும் என் மனைவிக்கும் பிரச்னையே வருது...?''

'எந்த பாயின்ட்டில்...?''

'ஒழுங்காக இருக்கிற ஒரே பிளக்பாயிண்ட்டில் யார் மொபைலுக்கு சார்ஜ் போடறதுன்னுதான்...''



'என்னோட கல்யாணத்துக்கு முந்தி அந்தாளை ரொம்ப நம்பினேன். ஆனா சரியான பித்தலாட்ட பேர்வழின்னு பிறகுதான் தெரிஞ்சது...?''

'யார் அவர்...?''

'எனக்கு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வச்ச தரகர்தான்...''

-வி.ரேவதி, தஞ்சாவூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com