உடல்நிலை சற்று சுகவீனம் அடைந்ததைத் தொடர்ந்து, தன் நண்பர்களை இரு மாதங்களுக்கு ஒருமுறை அழைத்துப் பேசுகிறார் விஜயகாந்த்.
கோவை வாசகர் வட்ட விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. கலாப்ரியாவுக்கு ஜெயகாந்தன் விருதும், மீரா விருது யூமா வாசுகிக்கும், புதுமைப்பித்தன் விருது கவிஞர் இசைக்கும் வழங்கப்பட உள்ளன.
நடிகர் சந்தானத்தின் நடிப்பில் நான்கைந்து படங்கள் தயாராகி உள்ளன. அவற்றை முறைப்படுத்தி வெளியிடும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார் அவர்.
நீண்ட காலமாக நடிக்காமல் இருந்த சேரன், மீண்டும் நடிப்பில் இருக்கிறார். அதற்கான ஏற்பாட்டில் மும்முரமாக இருக்கிறார்.