நல்ல சினிமா கனவுகள் உண்டு!

சிறு சிறு வேடங்கள் என்றாலும் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறார் நடிகர் செல்வமுருகன். "ஆதலால் காதல் செய்வீர்', "மேற்கு தொடர்ச்சி மலை', "ஒரு கிடாயின் கருணை மனு' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள இவர்,
நல்ல சினிமா கனவுகள் உண்டு!

சிறு சிறு வேடங்கள் என்றாலும் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறார் நடிகர் செல்வமுருகன். "ஆதலால் காதல் செய்வீர்', "மேற்கு தொடர்ச்சி மலை', "ஒரு கிடாயின் கருணை மனு' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள இவர், அடுத்தடுத்த நல்ல கதாபாத்திரங்களை எதிர்பார்க்கிறார். அவரிடம் பேசும் போது... "நல்ல சினிமாக்கள் பற்றி நிறைய கனவுகள் இருந்தது. அதற்கு நான் சின்ன வயதில் இருந்து பார்த்து வந்த சினிமாக்கள்தான் காரணம். வியாபாரம், தொழில் என்பதுதான் என் திட்டங்களில் ஒன்றாக இருந்தது. நீ என்னவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்பது போல், சினிமாவே அமைந்து விட்டது. இப்போது என் நடிப்புக்கு கிடைத்த வரவேற்பும், பாராட்டுதல்களும் நான் எதிர்பார்த்த ஒன்றுதான். இதன் பின்னணியில் பெரிய உழைப்பு இருந்தது, ஏனென்றால் என்னிடம் எப்போதும் மெனக்கெடல்கள் உண்டு. எதை தொட்டாலும் ஜெயித்து விட வேண்டும் என்ற வேட்கை இருக்கும். இப்போது ஒவ்வொரு நாளும் என்னை சினிமாவுக்காக தயார்ப்படுத்தி வருகிறேன். அதனால்தான் இதுவரை ஏற்ற கதாபாத்திரத்தில் நீங்கள் நேர்த்தியை உணர முடிந்தது. முக்கியமாக சினிமாவை புரிந்துக் கொண்டதும் இதற்கு ஒரு காரணம். வெற்றி ஒரு மனிதனை அழகாக்க வேண்டும்.. அதை எனக்கு செய்து கொடுத்திருக்கிறது இந்த சினிமா. எல்லோருக்கும் நன்றி. கலைஞனின் கனவில் அவனுடைய பங்களிப்பு பாதிதான். ரசிகர்களின் ஒத்துழைப்பில்தான் நல்ல கனவுகள் நிறைவடையும். இதுதான் என தீர்மானமாக பிடித்து விட்டால், அந்த கதையில் எந்த கதாபாத்திரத்தையும் ஏற்று விடுவேன். ஓடுகிற படத்தில் இருப்பதை விட, கதை உள்ள படத்தில் இருக்கவே ஆசைப்படுகிறேன். இந்த நிலைப்பாடு கடைசி வரை இருந்தால் அழகான வெற்றிகளின் பட்டியல் தொடரும்'' என்றார் செல்வமுருகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com