* தினமணி கொண்டாட்டம் 31}03}2019 இதழில் "பகத்சிங் கடிதம்' படித்தவுடன் மனதை நெகிழ வைத்தது.
- எம். சம்பத்குமார், ஈரோடு
* சா.கந்தசாமியின் க.நா.சுப்ரமண்யம் பற்றிய கட்டுரை மிகவும் சிறப்பாக இருந்தது.
-நா.கிருஷ்ணமூர்த்தி, சென்னை
* "பகத்சிங் கடிதம்' என்ற வரலாற்றுக் கட்டுரை அந்த மாவீரனின் சாகசங்களை இளையதலைமுறையினருக்கு எடுத்துச் சொன்னதற்கு நன்றி
இரா. வளையாபதி,தோட்டக்குறிச்சி
* அரசுப்பணி தேர்விற்கான பயிற்சி அளித்துவரும் முகுந்தனின் சேவை கட்டாயம் தேவை.
- வெயிலு முத்துச்சாமி, விருதுநகர்
* கொண்டாட்டம் பகுதியில் 360 தகவல் இல்லாதது என் போன்ற வாசகர்களுக்கு ஏமாற்றமே. இது பொது அறிவு பெட்டகம் ஐயா!
-கே.வி கந்தன், பெங்களூரு
* எம்.ஜி.ஆர் பற்றிய தொடர் அவரது புகைப்படங்கள் பார்த்து ரசித்தேன். தொடர் நிறைவு பெற்றது என்பது வருத்தமாக உள்ளது.
-ஆறுமுகம், கழுகுமலை
* துபாய் பயணக் கட்டுரை படித்த போது மிகுந்த மன நிறைவை தந்தது
-சண்முகம், திருவண்ணாமலை
* பெண் படைப்பாளிகள் ஒன்று கூடி நடத்தியது விழா அல்ல, அது ஒரு திருவிழா!
- வெ.லட்சுமி நாராயணன், வடலூர்
* கர்நாடகாவிலிருந்து வந்தாலும் தன்னை வாழ வைத்த நகரம் சென்னை என்பதை நினைத்துப் பார்க்கும் ஜமுனா பாராட்டுக்குரியவர்
- ராமமூர்த்தி, சிதம்பரம்