திரௌபதி வேடத்தில் சிநேகா
By DIN | Published On : 04th August 2019 02:30 PM | Last Updated : 04th August 2019 02:30 PM | அ+அ அ- |

மாபெரும் இதிகாசங்களில் ஒன்று மஹாபாரதம். கெளரவர்கள் மற்றும் பாண்டவர்களின் உறவினர்களுக்கிடையேயான குருúக்ஷத்ரா போராட்டத்தை விவரிக்கும்.
இந்தக் காவியத்தின் குருúக்ஷத்ர போரினை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் "குருúக்ஷத்ரம்'.
முப்பரிமாண தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ் , தெலுங்கு , ஹிந்தி , கன்னடம் , மலையாளம் என ஐந்து மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது.
நாகன்னா எழுதி இயக்குகிறார். பீஷ்மராக அம்பரிஷ் நடிக்கிறார். துரியோதனனாக தர்ஷன், கர்ணனாக அர்ஜுனனாக சார்ஜா, கிருஷ்ணர் வேடத்தில் வி. ரவிச்சந்தர், , சகுனியாக ரவி ஷங்கர், திரெளபதியாக சிநேகா நடிக்கின்றனர். ஹரி கிருஷ்ணா இசையமைத்துள்ளார். முனி ரத்னா எழுதி தயாரித்துள்ளார். இந்த மாதம் படம் திரைக்கு வருகிறது.