பெங்களூர் கஸ்தூரிபாய் சாலையில் பள்ளத்து பிள்ளையார் கோயில் இருக்கிறது. தரை மட்டத்திலிருந்து பத்தடி கீழே இருப்பதால் இந்த கோயிலுக்கு இந்தப் பெயர்.
சக்தி மிகுந்த பிள்ளையார். புது பைக், கார் வாங்குபவர்கள் முதலில் இங்கு வந்து அந்த வண்டிகளுக்கு பூஜை செய்து விட்டுத்தான் வண்டிகளை எடுப்பார்கள்.
அப்படி செய்தால் அந்த வண்டிகளுக்கு எந்த விபத்தும் நேராது என்பது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. பழைய வண்டிகள், வாங்குபவர்களும் முதலில் இங்கு வந்து பூஜை செய்கிறார்கள்.
-அனிதா ராமச்சந்திரன், பெங்களூரு