உருவம், உயரம், அழகு என எல்லாவற்றையும் தாண்டி கதாநாயகன் என்ற இடத்துக்கு வந்தவர் அப்புக்குட்டி. "அழகர்சாமியின் குதிரை' படத்துக்காக தேசிய விருது பெற்றவர். ஆனால், அதன் பின் குறிப்பிடும் படியாகப் படங்கள் எதுவும் இல்லை. இப்போது வரிசையாக 8 படங்களில் நடித்து வருகிறார். என்னைப் பொருத்தவரை இல்லாத வாய்ப்புகளையும் கிடைக்காத உயரங்களையும் நினைத்து வருத்தப்படுவதை விட, கிடைப்பதில் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்பதுதான் எண்ணம்."வாழ்க விவசாயி', "குஸ்கா' படங்கள் வெளிவரத் தயார். "வல்லவனுக்கு வல்லவன்', "பூம் பூம் காளை', "வைரி', "ரூட்டு', "மாயநதி' , "இந்த ஊருக்கு என்னதான் ஆச்சு' , "பரமகுரு' , "கல்தா' ஆகிய படங்கள் படப்பிடிப்பில் உள்ளன.
"வாய்ப்புகளைப் பொருத்தவரை எந்த வருத்தமும் இல்லை. கிடைத்த இடமே மகிழ்ச்சி. அப்புகுட்டி என்றால் இயல்பாக நடிப்பார் என்ற எண்ணம் உள்ளது. அந்த வகைப் படங்களில் மட்டுமே வருகிறேன். அதே நேரத்தில் நான் நகைச்சுவை, குணச்சித்திர நடிகன் என்பதைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்'' என்றார் அப்புக்குட்டி.