அமானுஷ்ய பின்னணியில் பேச்சி

இயக்குநர் பாலுமகேந்திராவுடன் பல ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தவர் ராமச்சந்திரன். இவர் எழுதி, இயக்கி அறிமுகமாகும் படம் "பேச்சி'.
அமானுஷ்ய பின்னணியில் பேச்சி

இயக்குநர் பாலுமகேந்திராவுடன் பல ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தவர் ராமச்சந்திரன். இவர் எழுதி, இயக்கி அறிமுகமாகும் படம் "பேச்சி'.
 "அமானுஷ்ய சக்திகளின் பின்னணியில் உருவாகி வரும் இப்படத்தில் முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரம் ஒன்றுக்காக பரிச்சயம் ஆன நடிகரின் தேர்வு நடைபெற்று வருகிறது.
 அறிவியலுக்கும், கடவுளுக்கும் இடையே இருந்து வரும் குழப்பங்களுக்குத் தீர்வு காணும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
 முழுக்க முழுக்க அடர்ந்த வனப்பகுதிகளில் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. 30 நாள்கள் கொண்ட ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். இப்படத்துக்காக பில்லி, சூனியம் பற்றி மிக நுணுக்கமாக ஆராய்ச்சி செய்து கதை எழுதப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேக மந்திரவாதிகளை சந்தித்து பில்லி, சூனியத்திற்கான மூலம் உள்ளிட்ட பல விஷயங்கள் கேட்கப்பட்டுள்ளன. கதையில் நிஜ மந்திரவாதிகள் பலர் நடிக்கின்றனர். இதுவரை வந்த அமானுஷ்ய பின்னணி படங்களிலிருந்து இது முற்றிலும் வேறுபட்ட அனுபவத்தை தரும்'' என்கிறார் இயக்குநர். வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகர்கள் சூர்யா, விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். இசை - ஐஸ்டின் பிரபாகரன். ஒளிப்பதிவு - பார்த்திபன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com