எதிர் வினையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் படம் "இருளன்'. ஸ்ரீகாந்த், பிரபு, அர்த்திஃப், ரோஹன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சூர்யா பிரபு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார். ஹர்ஷ வர்தனா இசையமைத்து, ஒளிப்பதிவு செய்கிறார். ஏகலைவன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
படம் குறித்து இயக்குநர் பேசும் போது..."வாழ்க்கையின் நீட்சிதான் சினிமா. வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரியாக இல்லை. ஒவ்வாரு நாளும் காட்சிகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. மார்க்வஸ் "வாழ்க்கையே பெரும் கனவு' என்கிறார். ஷேக்ஸ்பியர் "வாழ்வே ஒரு நாடகம், நாமெல்லாம் நடிகர்கள் என்று சொல்கிறார். அந்த வகையில் பார்த்தால், ஒவ்வொரு மனிதருக்கும் தான் செய்த பாவத்திற்கு நிச்சயம் தண்டனை உண்டு. இக்கால இளைஞர்கள் தாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறுவதாக அமையும் படமே இது. நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு பாவத்தைச் செய்து விட, செய்தவர்களுக்கு ஒரே தண்டனை தான், அது மரணம் என்ற வலிமையான கருத்தை கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது'' என்றார்.