ஐஸ்வர்யாவின் ஆசை

ஐஸ்வர்யாவின் ஆசை

ரஜினியின் மூத்த மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்தி வந்தார்.

ரஜினியின் மூத்த மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்தி வந்தார். "3', "வை ராஜா வை' படங்களை இயக்கினார். அடுத்தப் படம் இயக்குவதற்கான பணிகளை மேற்கொண்டிருந்தவர் திடீரென்று தொழில் அதிபர் ஆகும் எண்ணத்திற்கு மாறியிருக்கிறார். ஏற்கெனவே டென்னிஸ் அணி ஒன்றில் முதலீடு செய்தவர் தற்போது யோகாவில் முதலீடு செய்திருக்கிறார். இப்படியொரு எண்ணம் வந்ததற்கு என்ன காரணம் என்றதற்கு,"ஆரோக்கியத்துடன தொடர்புடைய பணிகளில் முதலீடு செய்ய வேண்டும் என்று எண்ணினேன். அதன்விளைவுதான் டென்னிஸையடுத்துத் தற்போது யோகாவில் பங்கேற்றிருக்கிறேன். நினைவாற்றல் மற்றும் முழுமையான ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உலகிற்கு நினைவூட்ட வேண்டும் என்பது தற்போது நான் பங்கேற்றிருக்கும் யோகாவின் குறிக்கோள். அதனால்தான் இதில் முதலீடு செய்திருக்கிறேன்' என்றார் ஐஸ்வர்யா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com