"இயற்கை' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி பரவலாகக் கவனம் பெற்றவர் குட்டி ராதிகா. 2006-ஆம் ஆண்டுக்குப் பின் தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கியவர், தற்போது 13 ஆண்டுகால இடைவெளிக்குப் பின் "தமயந்தி' என்ற படத்தின் மூலம் தமிழுக்கு மீண்டும் திரும்புகிறார். இப்படத்தை நவரசன் எழுதி இயக்குகிறார்.
படம் குறித்து இயக்குநர் பேசும் போது... ""தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் இப்படம் தயாராகிறது. ஹிந்தி, மலையாளம் மொழிகளிலும் எடுக்கப்பட்டு வருகிறது. "அருந்ததி', "பாகமதி' ஆகிய படங்கள் போன்ற ஹாரர் திரில்லர் படம் தமயந்தி. இதில் நடிக்க முதலில் அனுஷ்காவை தொடர்புகொண்டேன்.
அவருக்குத் திரைக்கதை மிகவும் பிடித்திருந்தாலும் மற்ற படங்களில் ஒப்பந்தமாகியிருந்ததால் அவரால் நடிக்கமுடியவில்லை. எனது இரண்டாவது தேர்வு குட்டி ராதிகா. அவரும் இரண்டு கன்னடப் படங்களில் பிஸியாக இருந்தார். இருப்பினும் ஒருமுறை கதையைக் கேளுங்கள் என்று கூறி அவரிடம் விவரித்தேன். கேட்டபின் தான் நடிப்பதாக உடனே சம்மதித்தார். இரண்டு காலக் கட்டங்களில் நடக்கும் இக்கதை ஹைதராபாத், பெங்களுரூ உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது. இம்மாத இறுதியில் படத்தை வெளியிட இருக்கிறோம்'' என்றார்.