நான் ஒரு பட்டதாரி ஆசிரியை, தினமணிக்கும் எனக்குமான உறவு கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. திருமணத்திற்குப் பிறகு எனது கணவர் அறிமுகப்படுத்திய தினமணி அதில் வரும் தலையங்கம், கட்டுரை மற்றும் துணுக்குகளைப் படித்து மதுரைக் கல்லூரி மேல் நிலைப்பள்ளியில் ஆண்டுதோறும் நடத்தி வரும் பாரதி விழாவில் ஆசிரியருக்கான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகளில் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றுள்ளேன்.
அதுமட்டுமல்லாமல் என்னிடம் பயின்ற மாணவ மாணவிகளையும் பல போட்டிகளில் பங்கேற்க செய்து பரிசுகள் பெற ஊக்கப்படுத்தி எனது பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளேன். அத்தனைக்கும் எனக்கு உரமூட்டியது தினமணியே.. இன்று நானும் தினமணி வாசகி என்பதில் பெருமைப்படுகிறேன். கட்டுரையாளராக, பேச்சாளராக, கவிதை படைப்பவராக, நாடக வசன கர்த்தாவாக என்னை மாற்றியது தினமணி.