போதையின் பின்னணி கதை 

போதையின் தீமைகளைக் கருவாகக் கொண்டு உருவாகி வரும் படம் "மரிஜுவானா'. அட்டு ரிஷி ரித்விக், ஆஷா பாத்தலோம், சீனிவாசன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
போதையின் பின்னணி கதை 

போதையின் தீமைகளைக் கருவாகக் கொண்டு உருவாகி வரும் படம் "மரிஜுவானா'. அட்டு ரிஷி ரித்விக், ஆஷா பாத்தலோம், சீனிவாசன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

கதை எழுதி இயக்குகிறார் எம்.டி.ஆனந்த். படம் குறித்துப் பேசுகையில்... "மரிஜுவானா என்றால் கஞ்சா என்று அர்த்தம். ஆனால், படத்தில் கஞ்சா எந்தக் காட்சியிலும் இடம் பெறாது. இலையையும் சாணத்தையும் வைத்து தான் காட்சிப் படுத்தினோம். ஒருவன் போதை பழக்கத்தில் இறங்குவதால் குடும்பமே நடுத்தெருவுக்கு வந்து விடும் என்பதெல்லாம் ஓவர் என்பது பல போதையாளர்களின் எண்ணம்.

தன் போதையும் குடியும் எப்போதும் தன் கட்டுப்பாட்டில் இருப்பதாகவே இவர்கள் கருதுகிறார்கள். ஆனால், போதை இவர்களை மயக்கி, வீழ்த்தி சாலைக்கு இழுத்து வந்து விடுகிறது. அதன் பின் அந்தக் குடும்பம் என்ன ஆகிறது...? இது போன்ற பல கேள்விகளைப் போதை பின்னணி கதையாக உருவாக்கி இருக்கிறேன். இளைஞர்களுக்கான படமாக மட்டுமில்லாமல், பெற்றோர்களுக்கான விழிப்புணர்வும் இதில் இருப்பதுதான் விசேஷம்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com