அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்தில் இருக்கும் மேரிலாண்ட் கடற்கரை குதிரைகளின் சொர்க்க பூமியாக திகழ்கிறது. அந்த கடற்கரையில் மனிதர்களைவிட, குதிரைகளே அதிகமாக உலாவுகின்றன. கடல் அலையில் விளையாடுவது, மணல் பரப்பில் படுத்து புரள்வது என கடற்கரையை தங்களுக்கான பொழுதுபோக்கு புகலிடமாக மாற்றி, உற்சாகமாக பொழுதை கழிக்கின்றன. குதிரை கடற்கரை என்பதால், அவைகளுக்கு இடையூறு விளைவிக்காத வண்ணம், அப்பகுதி மக்கள் கடற்கரையை பயன்படுத்தி கொள்கிறார்கள். கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்ட குதிரைகளை இந்த கடற்
கரையில் பார்க்கலாம்.