நான் 1920-இல் காசியில் பிறந்தேன். காசியில் காலை நேரம் மிகவும் ரம்மியமானவை. இப்போது நினைத்தால் கூட மனதுக்குள் ஏக்கம் ஏற்படுகிறது. அதிகாலையில் காசி விஸ்வநாதரின் ஆலயத்தை நோக்கி பூசாரிகள் சாரை சாரையாக "ஹர ஹர மகாதேவா' என்று கோரஸாக பஜனை செய்தபடி செல்வர். அவர்களின் பாடல்களால் கவரப்பட்டு நானும் அவர்கள் பின்னாலேயே செல்வேன்.
கங்கை நதிக்கரையில் அமைந்திருக்கும் செல்வந்தர் மாளிகைகளில் ஷெனாய் வித்வான்கள் வேலைக்கு நியமிக்கப்பட்டிருப்பார்கள். காலையில் மூன்று மணி நேரம் மாலையில் மூன்று மணி நேரம் அவர்கள் ஷெனாய் வாசிக்க வேண்டும். அந்த இசை கேட்டே நானும் இசைக் கலைஞனாக விரும்பினேன்.
தகவல்: "மை லைப் மை மியூசிக்' என்ற நூலில் ரவி சங்கர்