சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து 27 ஆண்டுகள் துணைவேந்தராகப் பணியாற்றியவர் அ.இலட்சுமணசாமி முதலியார்.
இவர் துணைவேந்தராக இருந்தபோது பட்டப்படிப்பு சான்றிதழ்களில் கையெழுத்து என்ற இடத்தில் துணைவேந்தரின் கையெழுத்து "சீல்' வைக்கும் முறை இருந்தது. அவரின் உதவியாளர் அவரிடம், "அனைத்துச் சான்றிதழ்களிலும் கையெழுத்திடுவது சிரமமானது. ஆகவே தற்போது முறைப்படி "சீல்' வைத்து விடலாம்'' என்றார்.
"ஐந்து ஆண்டுகள் சிரமப்பட்டு படித்துப் பட்டம் பெறுகிறார்கள். அவர்களின் உழைப்பால் கிடைத்த பட்டத்திற்கு ஒரு நிமிடம் செலவழித்து கையெழுத்துப் போடக்கூடாதா?'' எனக்கூறி இரவு பகல் பாராது எல்லா சான்றிதழ்களிலும் கையெழுத்திடுவாராம் இலட்சுமணசாமி முதலியார்.
-கோட்டை செல்வம்