சீன தயாரிப்புகள் வேண்டாம்: சாக்ஷி அகர்வால்

சீன தயாரிப்புகள் வேண்டாம்: சாக்ஷி அகர்வால்

நடிகை சாக்ஷி அகர்வால்  தனது டிக்-டாக் கணக்கிலிருந்து தன்னை விலக்கி கொண்டார்.

நடிகை சாக்ஷி அகர்வால்  தனது டிக்-டாக் கணக்கிலிருந்து தன்னை விலக்கி கொண்டார். டிக்-டாக்கில் அவரை 2.18 லட்சம் பேர் பின்பற்றியிருந்தனர். இதுகுறித்து அவர் பேசும் போது, ""பொறுமைக்கும் அமைதிக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவது நம் நாடு. ஆனால்,  சீனா அதைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி நம் நிலத்தை அபகரிக்கப் பார்க்கிறது. எனவே நான் இனிமேல் சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களை உபயோகப்படுத்த போவதில்லை என்றும், சீன தயாரிப்புகளின் விளம்பரங்களில் நடிப்பது இல்லை என்றும் முடிவு செய்துள்ளேன். இதன் தொடக்கமாக, நான் எனது டிக்-டாக் கணக்கை அகற்றியுள்ளேன். என்னைப் பொருத்தவரை எனது நாடு தான் எனக்கு எதிலும் முதன்மையாகத் தோன்றும், என் நாட்டின் கண்ணியத்தைத் காக்க ஒரு குடிமகளாக செய்ய வேண்டியதைச் செய்ய நான் ஒருபோதும் தயங்கமாட்டேன்'' என்று தெரிவித்திருக்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com