நடிகை திரிஷா சிரஞ்சீவி நடிக்கும் "ஆசார்யா' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். முதல்நாள் படப்பிடிப்புக்கு சென்றவர் அன்று மாலையே பெட்டி படுக்கையைத் தூக்கிக்கொண்டு ஊருக்கு திரும்பினார்.
இதுபற்றி திரிஷா தரப்பில் கூறும்போது, "பட தரப்பினர் முதலில் என்னிடம் எப்படி சொன்னார்களோ அப்படிப் படப்பிடிப்பை நடத்தாமல் காட்சிகளை மாற்றி தங்கள் இஷ்டத்துக்கு எடுக்கிறார்கள். அதுபற்றி என்னிடம் தெரிவிக்கவும் இல்லை' என்றார். இதையடுத்து திரிஷாவுக்கு பதில் தமன்னா, காஜல் ஆகிய ஹீரோயின்களிடம் பேசப்பட்டு வந்தது. இருவருமே அதிக சம்பளம் கேட்டனர். அவர்களிடம் படத் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து பேசப்பட்டது. இதில் காஜல் நடிக்க சம்மதிக்க, அவருக்கு 1 கோடி ரூபாய் சம்பளம் தர முடிவானதாம்.