மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் விஜய்யின் "மாஸ்டர்' படப் பாடலை மிக அருமையாகப் பாடியிருப்பதாகவும், அந்த இளைஞருக்கு விஜய் மற்றும் அனிருத் வாய்ப்பு தரவேண்டும் எனவும் ராகவா லாரன்ஸ் கூறியிருந்தார்.
இதனிடையே அன்னையர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து செய்தியுடன் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ள நடிகர் ராகவா லாரன்ஸ், இதுகுறித்து நடிகர் விஜய்யிடம் பேசியதாகவும், ஊரடங்கு முடிந்ததும், அந்த மாற்றுத்திறனாளி நபரை நேரில் அழைத்து வருமாறும், அவர் பாடுவதை நேரில் கேட்க ஆவலுடன் இருப்பதாகவும் விஜய் தெரிவித்ததாக லாரன்ஸ் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.