13 வருடங்களுக்கு பிறகு கூட்டணி

"ஓரம் போ', "வாத்தியார்', "6.2' உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர் பழனிவேல். இவர் தற்போது ஜீவன் நடித்து வரும்  " பாம்பாட்டம்' படத்தைத் தயாரித்து வருகிறார். 
13 வருடங்களுக்கு பிறகு கூட்டணி

"ஓரம் போ', "வாத்தியார்', "6.2' உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர் பழனிவேல். இவர் தற்போது ஜீவன் நடித்து வரும் " பாம்பாட்டம்' படத்தைத் தயாரித்து வருகிறார். இதையடுத்து " ரஜினி " என்ற புதிய படத்தையும் தயாரிக்கிறார்.

இப்படத்தை ஏ. வெங்கடேஷ் கதை எழுதி இயக்குகிறார். இந்த தயாரிப்பாளருடன் 13 வருடங்களுக்கு முன்பு அர்ஜுன் நடித்த "வாத்தியார்' படத்தை ஏ.வெங்கடேஷ் இயக்கியிருந்தார். விஜய் சத்யா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக மும்பையை சேர்ந்த கைநாட் அரோரா நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகர்களின் தேர்வு நடந்து வருகிறது.

அகில் பாபு அரவிந்த் வசனம் எழுதுகிறார். சூப்பர் சுப்பராயன் சண்டை பயிற்சி இயக்குநராகப் பணியாற்றவுள்ளார். த்ரில்லர், ஆக்ஷன் கலந்த கதையாகத் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. எதிர்பாராத விதமாக நிகழும் ஒரு விபத்தால் பல சிக்கல்களை சந்திக்கிறார் ஹீரோ. அது என்ன ... அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதுதான் படத்தின் திரைக்கதை. அவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நாய் ஒன்றும் நடிக்கிறது. படத்தில் நாயகனின் பெயர் ரஜினி பிரியன். அவர் ரஜினி ரசிகரும் கூட . அவரை நண்பர்கள் செல்லமாக ரஜினி என்று அழைப்பார்கள். அதனால் தான் படத்திற்கு ரஜினி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com