எப்படி தூக்கம் வரும்?

கிருபானந்த வாரியர் திருமணம் ஒன்றிற்குத் தலைமை தாங்க சென்றிருந்தார். அங்கே நடிகவேள் எம்.ஆர். ராதாவும் வந்து இருந்தார்.
எப்படி தூக்கம் வரும்?

கிருபானந்த வாரியர் திருமணம் ஒன்றிற்குத் தலைமை தாங்க சென்றிருந்தார். அங்கே நடிகவேள் எம்.ஆர். ராதாவும் வந்து இருந்தார். 

இருவரும் பேசிக் கொண்டிருக்க திருமண பேச்சுக்கிடையே நடிகவேள் தனது வழக்கமான கிண்டல் பாணியில் "சாமி முருகனுக்கு ஆறு தலை இருக்குன்னு சொல்றீங்க. ராத்திரி தூங்கும் போது எப்படி ஒரு பக்கமா படுப்பாரு?' என்றார். கூடி இருந்தவர்கள் அனைவரும் சிரிக்க, வாரியார் புன்சிரிப்புடன் திருமண ஏற்பாடுகளை பார்த்துக் கொண்டிருந்த மணமகளின் அப்பாவை அழைத்து அவரிடம் கேட்டார். "நேத்திக்கு தூங்கினீங்களா?' என்றார். 

"இன்னைக்கு கல்யாணத்தை வச்சுகிட்டு எங்கசாமி தூங்கறது' என்றார். வாரியார் நடிகவேளைப் பார்த்து கூறினார். "ஒரு குழந்தையின் வாழ்க்கையை நடத்தி வைக்க எண்ணிய இவர்களுக்கே தூக்கம் வரவில்லை. உலக மக்கள் அனைவருமே எம் பெருமானின் குழந்தைகள். அவருக்கு எப்படி தூக்கம் வரும்? அவருக்கு தூங்குவதற்கு நேரம் எது?' என்றார் வாரியார் சுவாமிகள். 
இதை கேட்ட நடிகவேள் தலைகுனிந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com