மலையாளத்தில் வெற்றி பெற்ற படம்

வரிசையாக பெண் குழந்தைகள் கொலை செய்யப்படுகின்றனர். அந்த கொலைகளை செய்த கொலைகாரனை பிடிப்பதற்காக போலீஸ் ஒரு சிறப்பு படை அமைக்கிறது.
மலையாளத்தில் வெற்றி பெற்ற படம்


வரிசையாக பெண் குழந்தைகள் கொலை செய்யப்படுகின்றனர். அந்த கொலைகளை செய்த கொலைகாரனை பிடிப்பதற்காக போலீஸ் ஒரு சிறப்பு படை அமைக்கிறது. அந்த குழுவில் உள்ள உதவியாளர் ஒருவர் கொலைகளுக்கான காரணங்களை கண்டுபிடிக்கிறார். கொலைகளும் கொலை நடத்திய விதங்களையும் வைத்து கொலைகாரனை நெருங்குகிறார் அந்த அதிகாரி. வழக்கின் முடிச்சுக்களை அவிழ்த்து அந்த குழுவின் தலைமை அதிகாரியிடம் சொல்கிறார்.

அவர்கள் அதை ஏற்க மறுக்கிறார்கள். மெல்ல மெல்ல அந்த போலீஸ் துறையை நம்ப வைத்து அந்த கொலைகாரனை எப்படி பிடிக்கிறான் என்பது கதை. "கடைசி நொடிகள்' என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் விரைவில் திரைக்கு வருகிறது.

கேரளத்தில் "பாரன்ஸிக்' என்ற பெயரில் வெளிவந்த இந்தப் படம் பெரும் வெற்றியைப் பதிவு செய்தது. இப்போது தமிழில் கடைசி நொடிகள் என்ற பெயரில் வெளிவரவுள்ளது. தமிழில் விஸ்வசாந்தி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் கொலைகாரனை கண்டுபிடிக்கும் போலீஸாக டொவீனா தாமஸ் நடிக்கிறார். மேலும் மம்தா மோகன்தாஸ், ரெபா மோனிகா, மோகன் சர்மா, பிரதாப்போத்தன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு - அகில் ஜார்ஜ். இசை - ஜேக்ஸ் பிஜோயி. வசனம் - ஏ.ஆர், கே. ராஜராஜா. தமிழ் உருவாக்கம் - ரசி மீடியா மேக்கர்ஸ் . தயாரிப்பு-கோபிநாத். கதை, திரைக்கதை, இயக்கம் - அனஸ்கான் - அகில்பால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com