இஸ்ரோவில் சாதனை செய்த விஞ்ஞானிகளில் பெரும்பாலானவர்கள் சிற்றூர்களில் பிறந்து வளர்ந்தவர்கள். அப்துல் கலாம் ராமேஸ்வரத்தில் இருந்து வந்தவர்.
மயில்சாமி அண்ணாதுரை கோவை மாவட்டத்தை சேர்ந்தவர். மங்கல்யான் திட்ட இயக்குநர் அருணன் பாளையங்கோட்டையைப் பூர்வீகமாகக் கொண்டவர். விஞ்ஞானி வளர்மதி அரியலூரில் பிறந்தவர். கன்னியாகுமரி மாவட்டத்தின் மேலசரக்கல்விளை கிராமத்தில் பிறந்தவர் கே.சிவன். ஆக எந்த ஊரில் பிறந்து வளர்ந்தாலும் விண்வெளி வரை சாதிக்க முடியும்.