பாரதியார் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவார். சென்னையில் ஒரு முறை ஆங்கிலத்தில் ஆன்மிகச் சொற்பொழிவாற்றினார். அந்த நிகழ்ச்சிக்கு பாரதியின் போட்டோவைப் போட்டு பத்திரிகையில் விளம்பரம் கொடுக்க ஏற்பாடு நடந்தது. போட்டோ எடுப்பதற்காக சென்னை பிராட்வேயில் இருந்த ரத்னா கம்பெனி என்ற போட்டோ ஸ்டுடியோவுக்கு சென்றார்.
அப்போது கடையில் சர்மா என்ற சிறுவன் தான் இருந்தான். சிறுவனை நம்பி போட்டோ எடுத்துக் கொள்ள பாரதிக்கு தயக்கம். என்றாலும் "நல்லாவே எடுப்பேன் ஐயா' என்று சிறுவன் கொடுத்த நம்பிக்கையால், போட்டோ எடுத்துக் கொண்டார். நெகட்டிவைக் கழுவி பிரிண்ட் போடும் வரை காத்திருந்தார்.
பார்த்தார். நன்றாகவே இருந்தது. அந்த திருப்தியால் மற்றொரு நாள் தன் சீடன் குவளைக் கண்ணணை அழைத்துச் சென்று அவரோடும் ஒரு போட்டோ எடுத்துக் கொண்டார். ஆனால் அந்தப் படத்தை காணவில்லை.
(மயிலாப்பூர் பாரதியார் மெஸ்ஸில் மாட்டப்பட்டிருந்த புகைப்படம்)