அகில இந்திய அளவில் பொறியியல் பட்டதாரிகளுக்காக நடத்தப்படும் "கேட்' (எஅபஉ-2019) தேர்வுக்கு ஆன்- லைன் மூலம் செப்டம்பர் 21 -ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
முதுநிலை பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக். மற்றும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு "கேட்' நுழைவுத் தேர்வு எழுதுவது அவசியம்.
தமிழகத்தைப் பொருத்தவரை "கேட்' நுழைவுத் தேர்வுடன், "டான்செட்' நுழைவுத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலும் சேர்க்கை நடத்தப்படுகிறது.
அதுமட்டுமின்றி, பல பொதுத் துறை நிறுவனங்கள் இந்தத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணியாளர் தேர்வையும் நடத்துகின்றன. பல தனியார் நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும் இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பளிப்பதில் முன்னுரிமை அளிக்கிறது. 2019- ஆம் ஆண்டுக்கான "கேட்' தேர்வை சென்னை ஐஐடி நடத்துகிறது.
தகுதி: பொறியியல் பட்டதாரிகள், தொழில்நுட்ப படிப்புகளில் பட்டப்படிப்பு மற்றும் முதுகலை முடித்தவர்கள் இந்த தேர்வை எழுதலாம். 4 ஆண்டுகளைக் கொண்ட அறிவியல் படிப்புகள், முதுகலை அறிவியல் படிப்பை முடித்தவர்கள் எழுதலாம்.
தேர்வு முறை: இணையதளம் வழியான கணினித் தேர்வு அடிப்படையில் இந்தத் தேர்வு நடைபெறும்.
கட்டணம்: எஸ்சி., எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள் ரூ.750, மற்றவர்கள் ரூ.1500 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
தேர்வு நடைபெறும் நாள்: கணினி வழியில் மட்டுமே நடத்தப்படும் இந்தத் தேர்வானது 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 2,3 மற்றும் 9,10 ஆகிய நான்கு நாட்களில் நடத்தப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: ஜ்ஜ்ஜ்.ஞ்ஹற்ங்.ண்ண்ற்ஞ்.ஹஸ்ரீ.ண்ய் வலை தளத்தில் ஆன்- லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். செப்டம்பர் 1 -ஆம் தேதி முதல் செப்டம்பர் 21 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இந்தத் தேர்வை வெளிநாட்டினரும் எழுதலாம். இதில் தகுதி பெறும் வெளிநாட்டு மாணவர்கள், இந்திய கல்வி நிறுவனங்களில் முதுநிலை பொறியியல் படிப்புகள், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேர்ந்து படிக்க முடியும்.
மேலும் விவரங்களுக்கு: https://drive.google.com/file/d/18tF_LQc_48eIs5YimeGfWsKy8cYPRkeW/view என்ற இணையதளத்தைப் பாருங்கள்.