முக நூலிலிருந்து....
* எதிர் வரும்
காலச்சாலையின் வளைவில்...
யார் யாரோ
தொலைந்தது போல்
உன் நினைவுகளும்.
நர்மதா நர்மதா
* வெற்றி என்பது
நமது பாக்கெட்டில் இருக்கும் பலூன்.
அதை யார் எடுத்து ஊதுகிறார்களோ...
அவன் வெற்றியாளன் ஆகிறான்.
புலம் லோகநாதன்
* சிலருக்கு விளக்கம்
கொடுப்பதை விட...
அவர்களிடம் இருந்து
விலகி இருப்பதே மேல்.
திருப்பதி ராஜா
* "இன்னமும் மனிதனை
நம்புகிறேன்' என்கிற
கடவுளின் செய்தியைச் சுமந்தே
ஒவ்வொரு குழந்தையும்
பூமிக்கு வருகிறது.
முருக தீட்சண்யா
* உங்க கையால ஒரு மரக்கன்று வைத்து,
அது துளிர்த்து வர்றதைப் பார்க்கும்போது
ஒரு மகிழ்ச்சி வருமே...
வச்சி பாருங்க தெரியும்.
சகோ
சுட்டுரையிலிருந்து...
* ட்விட்டர் வந்து பார்...
காலையிலேயே தத்துவத்தோடு எழுவாய்.
உனக்குள்ளிருக்கும் கண்ணதாசனும்
வைரமுத்துவும் வெளியே வருவார்கள்...
தீய்ஞ்ச பணியாரத்தையும்
ஓடி ஓடி போட்டோ எடுப்பாய்...
சிறகு முளைக்காத பறவையைக் கூட ரசிப்பாய்...
அரசியல் ஞானியாவாய்...
ட்விட்டர் வந்து பார்.
நட்சத்திரா
* உன்னுடன்
இருந்தவர்கள்
உன்னை
விட்டுச் சென்றாலும்...
தனி ஒருவனாய்ப் போராடு.
மல்லிகா நல்லுசாமி
* கவலை என்னும்
கதவுகளை மூடி விடுங்கள்
கண்கள் என்னும் ஜன்னல் வழியே
நல்லவற்றைத் தேடுங்கள்...
நிம்மதி எனும் தென்றல்
உங்களை நிச்சயம் தீண்டிச் செல்லும்.
நீர்ப்பறவை
வலைதளத்திலிருந்து...
ஆதிமனிதனின் முதல் வெளிப்பாடே கிறுக்கல்கள் தான். குகைச்சித்திரங்கள், மொழி தோன்றுவதற்கு முன்பே ஓவியங்கள் உருவாகியிருப்பதைச் சொல்கின்றன. எனவே தான் குழந்தைகள் அந்த ஆதியுணர்வின் தூண்டுதலாலேயே கையில் கிடைத்தவற்றைக் கொண்டே கிறுக்கத் தொடங்குகின்றன.
கிறுக்கல்களில் கிடைக்கும் சுதந்திரம் குழந்தைக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. தன்னால் ஒரு காரியத்தைச் செய்யமுடியும் என்ற தன்னம்பிக்கையைத் தருகிறது.
கிறுக்கல்கள் குழந்தையின் மூளையில் முளைவிடும் சிந்தனாசக்தியின் துவக்கம் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.
கிறுக்கல்கள் குழந்தைகளின் மனஎழுச்சியின் வெளிப்பாடு. ஒழுங்கற்ற அந்தக்கோடுகள், கட்டங்கள், முக்கோணங்கள், வட்டங்கள், அரைவட்டங்கள் எல்லாம் குழந்தைகளுக்குப் பரவச உணர்வைத் தருபவை.
குழந்தைகள் கிறுக்கும்போது அதன் முகத்தைக் கவனியுங்கள். அப்படி ஒரு தீவிரத்தன்மை தெரியும். அந்தத் தீவிரம் அந்தக்குழந்தையிடம் ஒருமையுணர்வை ஏற்படுத்தும்.
சுவரிலோ, புத்தகத்திலோ, நோட்டிலோ, கிறுக்கியதற்காக ஒருபோதும் குழந்தைகளைத் திட்டாதீர்கள். குழந்தைகளிடம் முளைவிடும் படைப்பூக்கம் கருகிவிடும்.
குழந்தைகள் கிறுக்குவதற்கென்று கரும்பலகை, நோட்டு, வெள்ளைத்தாள்களைக் கொடுங்கள். கிறுக்கும்போது தலையிடாதீர்கள். இப்படி எழுதவேண்டும், இப்படி வரைய வேண்டும் என்று திருத்தாதீர்கள்.
குழந்தைகள் இயல்பிலேயே கற்றுக்கொள்வதில் தீராத பற்றுக் கொண்டவர்கள். தான் கிறுக்கியதைக் காட்டும் குழந்தையைக் கவனியுங்கள். அந்தக்கிறுக்கலை அங்கீகரியுங்கள். ஆமோதியுங்கள். பாராட்டுங்கள்.
குழந்தைகள் குட்டி மனிதர்கள் என்று எப்போதும் கவனம் வையுங்கள்.
http://udhayasankarwriter.blogspot.com/