இணைய வெளியினிலே...

பயணம் என்ற வார்த்தை ஏற்படுத்தும் அதிர்வுகளையும், கால அட்டவணைக்குள் அடங்காத மனவெளியில் அந்த வார்த்தை மத்தாப்பு கோடுகளாய் விசிறிவிடும் நினைவொளித் துகள்களையும்,
இணைய வெளியினிலே...

முக நூலிலிருந்து....
• புழுதி கூட 
பறந்த வண்ணம் தான் இருக்கிறது... 
சரியான பாதை கிடைத்து
படரும் வரை.
தமிழ் உதயா

• ஏன்டா, உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லயா?
18 வது மாடி ஜன்னல இப்படி 
தொடைக்கணுமா?
இன்னும் பத்து நிமிஷத்துல பெய்யப் 
போற மழைல
எப்படியும் அது சுத்தமாகத்தான் போகுது. 
சுப்பா ராவ் சந்திரசேகர ராவ்

• நம்ம காலுக்கும், நடைக்கும், கனத்துக்கும்
தகுந்த மாதிரி செருப்பு வாங்கினா... 
நிம்மதியா நடக்கலாம்.
பாக்குறதுக்கு நல்லாருக்கு பிடிச்சிருக்குனு
எதையோ ஆசாசையா வாங்கிட்டு வந்து... 
போட்டு நடந்தா, 
செருப்பு காலை விட்டுப் போய்ட கூடாதேன்னு...
இழுத்துப் பிடிச்சு, அதுக்கு தகுந்த மாதிரி
நம்ம நடைய மாத்தி நடக்க வேண்டியிருக்கு!
லதா

சுட்டுரையிலிருந்து...
• சொர்க்கமே என்றாலும்
அது நம்மூரை போலாகுமா?
(ஊர்ல கரண்ட்-தண்ணி இல்லை, குண்டும் குழியுமா ரோடு, பஸ் போனா மூஞ்சில புழுதி, இருந்தாலும்)
அம்பாசமுத்திரம் to மங்களூர்
வி.ஸ்ரீதர்

• ஏகப்பட்ட நிறம் மாறினாலும்...
தன் தரம் மாறவில்லை, 
பணம். 
சுஜாதா கண்ணன்

• எதையும் ஈசியா எடுத்துக்கிறதுல
ஒரு பிரச்னை என்னன்னா...
என்னத்த வேணா பேசிட்டு,
இவன் தான் கண்டுக்க மாட்டானேன்னு
பேசி கஷ்டப்படுத்திருவாய்ங்க.
நான் மகான் அல்ல

• "நல்லா இருக்கியா''ன்னு கேட்டா ? 
"நல்லா இல்லன்னா என்ன பண்ணப் போற?''ன்னு
கேக்கிற மனநிலை இருந்தாலும்... 
"நல்லா இருக்கேன் மச்சான்''னு சொல்லதான் தோணுது. 
யார் மனசையும் 
புண்படுத்தக் கூடாது பாருங்க...
பகவான் ஈழ்.எட்டு

வலைதளத்திலிருந்து...
பயணம் என்ற வார்த்தை ஏற்படுத்தும் அதிர்வுகளையும், கால அட்டவணைக்குள் அடங்காத மனவெளியில் அந்த வார்த்தை மத்தாப்பு கோடுகளாய் விசிறிவிடும் நினைவொளித் துகள்களையும், வெளிச்சமாய், இருட்டாய், ஈரமாய், வறட்சியாய், பசுமையாய், பாலைவனமாய் அது பரவவிடும் பாதைகள் அனைத்தையும் எழுத்தில் பதிந்துவிட முடியுமா எனத் தெரியவில்லை ! 
மனிதனுக்குப் பயணங்கள் சாத்தியமற்றுப் போயிருக்குமானால், அவனது ஆறாம் அறிவு இவ்வளவு கூர்மை பெற்றிருந்திருக்காது! மொழிகள் தழைத்து, கலாசாரங்கள் ஸ்திரப்பட்டு, மனிதனின் அறிவும் ஞானமும் விருத்தியானதற்கு, அவனது இடைவிடாத பயணங்களே காரணம். 
நாம் தீர்மானித்த இலக்கை விடப் பலபடங்கு அதிகமான ஆச்சரியங்களையும், புதிர்களையும் நாம் கடக்கும் பாதைகளில் நிரப்பி வைத்திருப்பவை பயணங்கள் !
பயணம் என்ற சொல்லை விட "யாத்திரை' என்னும் சொல் ஆழமானதாகத் தோன்றுகிறது. எப்படி வாழ்ந்தாலும் நிறைவு தோன்றாமல், வாழ்க்கையையே யாசிக்கும் பயணம்! "நாடோடி' இன்னும் மேன்மையாகத் தோன்றுகிறது. எந்த தேடுதலுமற்று, வாழ்க்கை பற்றிய தர்க்க, தத்துவங்களற்று இடம் பெயர்தல் மட்டுமே நோக்கமாய்க் கொண்ட ஒரு நாடோடியின் வாழ்க்கை பெரும்பேறு! மண்ணைத் தேடி, அதன் மனிதர்களை, அவர்களின் மொழிகள் மற்றும் கலாசாரங்களைத் தேடியலைந்த மனிதர்களால்தான் மனித குலம் கடந்த பாதை வரலாறாய் நிலைத்தது.
http://saamaaniyan.blogspot.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com