இணைய வெளியினிலே...

சிறுவயதில் மழைக்காலம் என்றாலே சந்தோஷம்தான். அதற்குக் காரணம் நிறைய... காலையில் பேய் மழை பெய்தால் பள்ளிக்குச் செல்ல வேண்டாம்.
இணைய வெளியினிலே...

முக நூலிலிருந்து....
* இடம், பொருள், ஏவலெல்லாம்
மலர்வதற்கில்லை.
கலிய மூர்த்தி

* எல்லாவற்றின் விலையை 
விசாரிக்கிற மனிதன், 
மதிப்பை என்றும் 
உணர்ந்ததே இல்லை. 
விலை மதிப்பற்றது... 
அம்மாவின் அன்பு. 
தஞ்சை தவசி

* நீங்கள் கொடுக்கும்போது, 
உங்களுக்கு ஏதாவது கிடைக்க வேண்டும்
என எதிர்பார்க்காதீர்கள். 
நீங்கள் ரோஜாவைக் 
கொடுக்கும்போது, 
அதன் மணம் உங்கள் 
கைகளில் ஒட்டியிருக்கும்.
- கார்லோஸ் சிலிம், 
மெக்சிகோ தொழிலதிபர்
சுந்தரபுத்தன்

* முதலில் வரத்தைக் கொடு; 
கிடைத்த பின் தவமிருக்கிறேன்.
ஆரூர் தமிழ்நாடன்
சுட்டுரையிலிருந்து...
நானும் கொஞ்சநாள்
சித்தார்த்தனாக வாழ்ந்துவிட்டுத்தான்...
புத்தனாக முடியும்.
கொஞ்சம் பொறுங்கள். 
நல்லநேரம் பார்த்துக் 
கொண்டிருக்கிறேன்!
முதியோன்

* கஷ்டம் என்பது இரவு மாதிரி...
கண்டிப்பா காலைல 
விடிஞ்சிரும்.
ஜனா

* வாழ்வில் வீசும்
கடுமையான புயலை எதிர்கொள்ள...
அமைதியான மனதே...
சக்தி வாய்ந்த உடைவாள்.
சைலேந்திர பாபு

* தலையை உயர்த்தாத வரை...
நீங்கள் வானவில்லைப்
பார்க்கப் போவது இல்லை.
சோலை ராஜா

வலைதளத்திலிருந்து...
சிறுவயதில் மழைக்காலம் என்றாலே சந்தோஷம்தான். அதற்குக் காரணம் நிறைய... காலையில் பேய் மழை பெய்தால் பள்ளிக்குச் செல்ல வேண்டாம். மதியம் மழை வருவது போலிருந்தால் புத்தகப் பையை பள்ளியில் வைத்துவிட்டு, கிராமத்துப் பிள்ளைகள் என்ற முறையில் பள்ளி விடும் முன்னே வீடு திரும்பலாம். மழை பெய்துவிட்டபின் லேசான தூறலில் நனைந்து கொண்டே வந்து இரவு முழுவதும் தும்மி காலையில் பள்ளி செல்வதைத் தவிர்க்கலாம். இப்படி நிறைய. 
அந்த மழைக்காலத்தில் மழை பெய்து நின்றதும், நாங்கள் முதலில் செல்வது கண்மாய்க்குத்தான். "எவ்வளவு தண்ணீர் வந்திருக்கு... நாளை கண்மாய்க்கு குளிக்க வரலாமா?' என்று பார்க்கத்தான். எங்கள் கண்மாயில் பெரிதும் சிறிதுமாக இரண்டு மேடான பகுதி எங்களின் அடையாளமாகும். அதில் பெரிய மேடு (பெரிய முட்டு) நீரில் அமுங்கினால் அந்த வருடம் விவசாயம் தண்ணீர் தட்டுப்பாடில்லாமல் நல்லாயிருக்கும். அதேபோல் கண்மாய்க்குள் இருக்கும் முனீஸ்வரரின் அடிப்பீடம் தண்ணீருக்குள் அமுங்கினால் நீர் இறைக்காமல் விளைந்துவிடும். கோடை போடவும் செய்யலாம் என்பது போன்ற வழி வழி வந்த கணக்குகள் உண்டு. 
மழைநாளில் பள்ளியில் இருந்துவரும்போது வழியெங்கும் நீர் ஓடிக் கொண்டிருக்கும். அந்த நீரில் ஆட்டம் போடுவதுடன் (புத்தகப் பையும் இருக்காதல்லவா?) ஓடும் நீரின் குறுக்கே அணைகட்டி, செங்கல் கற்களை வைத்துப் பாலம் போல் கட்டி விளையாடி வீடு வந்து சேர நேரமாகும். இதில் இரண்டு குழுக்களாய் பிரிந்து பாலம் கட்டி தண்ணீரை பாலத்தின் அடியில் இருந்து மேலே வருவது போல் செய்வதில் போட்டி வேறு. போட்டியின் முடிவில் ஏற்படும் சண்டையால் பாலம் தகர்க்கப்படும். 
http://vayalaan.blogspot.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com