ஒட்டுமொத்த உழைப்பு!

உலகத்தில் உள்ளவர்கள் எல்லாம், தொழில்துறை வளர்ச்சியில் காட்டுகிற வேகம், நம்மிடம் இல்லை. வேகமாக சில நேரம் ஓடுகிறோம். அதைவிட பல நேரங்கள் தளர்ந்து விடுகிறோம். இதுதான் இதற்குக் காரணம்.
ஒட்டுமொத்த உழைப்பு!

உலகத்தில் உள்ளவர்கள் எல்லாம், தொழில்துறை வளர்ச்சியில் காட்டுகிற வேகம், நம்மிடம் இல்லை. வேகமாக சில நேரம் ஓடுகிறோம். அதைவிட பல நேரங்கள் தளர்ந்து விடுகிறோம். இதுதான் இதற்குக் காரணம். இந்த தளர்ச்சியைப் போக்குவதற்கு புதிய மலர்ச்சியை ஏற்படுத்துவதற்கு அறிஞர்களும் சமூகச் சிந்தனையாளர்களும் படித்த இளைஞர்களும் முன் வர வேண்டும்.
 அதற்கு நம்முடைய உயரம் என்ன என்பதை உணர வேண்டும். ஒரு தந்திக் கம்பத்தின் உயரத்தைப் பார்க்கிறபோது அதனுடைய உயரம் இத்தனை அடி என்று சொல்லிவிடலாம். ஒரு மரத்தினைப் பார்க்கிறபோது அதனுடைய உயரம் என்னவென்று சொல்லிவிடலாம். ஒரு மனிதனைப் பார்க்கிறபோது, அவனுடைய உயரத்தினைச் சொல்லிவிடலாம். ஆனால் குளத்திலே இருக்கிற தாமரையினுடைய உயரம் என்ன என்று சொல்லிவிட முடியுமா? முடியாது. ஏனென்றால் தாமரையின் உயரம், தண்ணீரின் உயரத்தைப் பொறுத்தே அமைகிறது. நீர் மட்டம் உயர உயர தாமரைச் செடியின் உயரமும் உயர்ந்து கொண்டே போகும். அதைப் போலவே உலக நாடுகளை வைத்துப் பார்க்கிறபோது, நம்முடைய உயரம் என்பது வெறும் அளவுகோலால் அளவெடுப்பதாக அமைத்துவிடுவது அல்ல. நம்முடைய உயரம் எதை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்றால் நீரின் உயரம் உயர உயர தாமரையின் உயரம் உயர்வதைப் போல, நம்முடைய உயரமும் நம்முடைய உழைப்பை அடிப்படையாகக் கொண்டே அமைகிறது. அப்படியானால் நம்முடைய ஒட்டுமொத்த உழைப்பின் வேகமே நம்முடைய உயரம் என்பதை உலகநாடுகள் கணக்கெடுத்துக் கொண்டிருக்கின்றன.
 இதயகீதம் இராமானுஜம் எழுதிய "இலக்கைத் தேடும் இதயங்கள்'
 என்ற நூலிலிருந்து...
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com