முக உறை அகற்றி எப்போது முகம் அணிவோம்?
நேசமிகு ராஜகுமாரன்
"பாசிட்டிவ்' என்பது கெட்ட வார்த்தை ஆகி விட்டது.
இந்திரன் ராஜேந்திரன்
குழி பறிப்பதொன்றும் தவறில்லை...
மரம் நடுவதாயிருந்தால்.
வசந்தகுமாரன்
ஒன்றிலிருந்து ஒன்றைக் கற்றுக் கொண்டேயிருக்கிறோம்...
எப்போது இந்த வாழ்வைப் படித்து முடிக்க?
பா.மகாலட்சுமி
படிக்கும் புத்தகங்கள் நம்மை புத்தகமாக மாற்ற வேண்டும்...
பிறர் படிக்கும் வகையில்.
சிறு கேள்விகளுக்கு நீண்ட பதில் அளிப்பவரிடம் சற்று ஜாக்கிரதையாக இருங்கள்...
ஏனெனில் நிச்சயமாக அவன்எதையோ மறைக்கிறான்.
பத்மகுமார் தண்டபாணி
ஏதோ ஒரு நிறைவுறாத் தன்மை இருக்கின்றதா?
அது அவ்விதமே இருக்கட்டும்.
அதுதான் வாழ்க்கையை தொடர்ந்து இயக்கும் நிர்பந்தம்...
ஈரோடு கதிர்
வெளிநாட்டில் வேகமாகப் பரவும்போது பத்திரமா வீட்டுக்குள் இருந்தோம்...
ஆனால் இப்போது பக்கத்து வீட்டுக்கு வந்தாலும்...
பந்தாவாய் வெளியே சுத்துறோம்.
சப்பாணி
சுமையோ சுகமோ சுமக்கும் பொருளில் இல்லை...
சுமக்கும் மனதில் இருக்கிறது.
குமாரி
எடுத்தமா கவுத்தமான்னு முடிவு பண்ண வாழ்க்கை ஒண்ணும் வாட்டர்கேன் இல்ல.
அது ஊற வச்ச துணி மாதிரி...
வெளுத்தமா காய போட்டமான்னு போய்ட்டே இருக்கும்.
மழைமுகில்
என்ன காரணம் பேசாமல் இருக்கிறீர்கள்?
என்ன காரணம் கேட்காமல் இருக்கிறீர்கள்?
என்ன காரணம் பார்வையாளனாகவே இருக்கிறீர்கள்?
என்ன காரணம் பங்கெடுக்காமல் இருக்கிறீர்கள்?
என்ன காரணம் தயக்கத்தை விட மறுக்கிறீர்கள்?
என்ன காரணம் ஒதுங்கிப் போகிறீர்கள்?
என்ன காரணம் மயங்கிச் சாய்கிறீர்கள்?
என்ன காரணம் வளைந்து நடக்கிறீர்கள்?
என்ன காரணம் சத்தம் இழக்கிறீர்கள்?
என்ன காரணம் சொற்களை விழுங்குகிறீர்கள்?
என்ன காரணம் ஒளிந்து மறைகிறீர்கள்?
என்ன காரணம் பாய யோசிக்கிறீர்கள்?
என்ன காரணம் தைரியம் தொலைக்கிறீர்கள்?
என்ன காரணம் கதவை அடைக்கிறீர்கள்?
என்ன காரணம் கனவை விரட்டுகிறீர்கள்?
என்ன காரணம் இப்படி இருக்கிறீர்கள்?
https://raajaachandrasekar.blogspot.com