வேலை... வேலை... வேலை...

பிளஸ் 2 தேர்ச்சியுடன் மருத்துவ இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஓர் ஆண்டு எம்எல்டி சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். 
வேலை... வேலை... வேலை...

தமிழக அரசில் வேலை

நிர்வாகம் : மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (டிஎன் எம்ஆர்பி) 
பணி:  ஃபீல்ட் அசிஸ்டன்ட்  

காலியிடங்கள்: 174 

சம்பளம்: மாதம் ரூ. 18,200 - ரூ.57,900

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் மருத்துவ இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஓர் ஆண்டு எம்எல்டி சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். ஆரோக்கியமான உடற்தகுதியும், பார்வைத் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:  01.07.2022 தேதியின்படி, 18 வயது முதல் 59 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: கல்வி, தொழில்நுட்பத் தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.600, மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.300 கட்டணமாகச் செலுத்த வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.mrb.tn.gov.in/pdf/2022/Field_Assistant_Notification_13012022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 02.02.2022 


ரிசர்வ் வங்கியில் வேலை

மொத்த காலியிடங்கள்: 14 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: லீகல் ஆபீசர் 
காலியிடங்கள்: 02 
சம்பளம்: மாதம் ரூ.55,200

வயது வரம்பு: 01.01.2022 தேதியின்படி, 21 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். 

பணி: மேனேஜர் 
காலியிடங்கள்: 09
சம்பளம்: மாதம் ரூ.55,200
வயது வரம்பு: 01.01.2022 தேதியின்படி, 21 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

பணி: லைப்ரரி புரொஃபெசனஸ்ஸ் 
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.44,500
வயது வரம்பு: 01.01.2022 தேதியின்படி, 21 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்

பணி: ஆர்க்கிடெக்ட்
காலியிடங்கள்: 01
சம்பளம்:  ரூ.44,500
வயது வரம்பு: 01.01.2022 தேதியின்படி, 21 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

பணி: கியூரேட்டர் 
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.44,500

வயது வரம்பு: 01.01.2022 தேதியின்படி, 25 வயது முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சட்டத்துறையில் பட்டம் பெற்றிருப்பவர்கள், பொறியியல் துறையில் எலக்ட்ரிகல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், 60 சதவிகித மதிப்பெண்களுடன் சிவில் பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள், கலை, அறிவியல், நூலக அறிவியல் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள், வரலாறு, பொருளாதாரம், நுண்கலை, தொல்லியல், இசையியல், நாணயவியல் ஆகியவற்றில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.  

வயது வரம்பு: 01.01.2022 தேதியின்படி, 21 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.  ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பில் வேறுபாடு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.  

விண்ணப்பிக்கும் முறை:  www.rbi.org.in  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.100, பொது, ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.600 கட்டணமாகச் செலுத்த வேண்டும். வங்கியின் ஊழியர் பிரிவினைச் சேர்ந்தவர்கள் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்ப படிவம், கட்டணம் செலுத்துவதற்கு: https://ibpsonline.ibps.in/rbidec21/ என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

மேலும் விவரங்கள் அறிய: https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/NONCSGADVTPY 
202107AD8A7831214203A894A73C52EDD416.PDF என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 04.02.2022

பஞ்சாப் தேசிய வங்கியில் வேலை


பணி: பியூன்
காலியிடங்கள்: 16

பணியிடங்கள்:  செங்கல்பட்டு, சென்னை, விழுப்புரம், பாண்டிச்சேரி.
தகுதி: பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 

வயது வரம்பு: 18 வயதிலிருந்து 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.  எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு உச்சபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு. 

தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும்முறை: மேலே குறிப்பிட்ட  இடங்கள் சார்ந்த மாவட்டங்களில் உள்ள பஞ்சாப் வங்கியின் கிளைகளில் வழங்கப்படும்  விண்ணப்பப் படிவத்தை வாங்கி பூர்த்தி செய்து, பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்தை இணைத்து, RECRUITMENT OF PEONS IN SUBORDINATE CADRE - 2021-22 என்று அஞ்சல் மேலுறையில் எழுதி கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

முகவரி:  The Deputy Circle Head IHRD. Punjab National Bank, Circle Office Chennai South, PNB Towers, 2nd Floor, No. 46-49, Royapettah High Road, Royapettah, Chennai -600014.

மேலும் விவரங்கள் அறிய:  https://drive.google.com/file/d/1w6NuEmvH7fcQz3pQ1OrEpA7f-Xj7F7hY/view என்ற லிங்கில் சென்றுபாருங்கள். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 5.2.2022

தமிழக சுகாதாரத்துறையில்  வேலை 


மொத்த காலியிடங்கள்: 39  

பணி:  கிராம சுகாதார செவிலியர்கள்  
சம்பளம்: மாதம் ரூ. 19,500 - ரூ.62,000

தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சியுடன் இந்திய நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் துணை செவிலியர் மருத்துவச்சி, பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்கள் (பெண்) படிப்பை முடித்து தமிழ்நாடு செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் கவுன்சிலில் பதிவு செய்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு:  01.07.2022 தேதியின்படி, 18 வயது முதல் 59 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : http://www.mrb.tn.gov.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300 செலுத்த வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் பணி குறித்த திறன்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.mrb.tn.gov.in/pdf/2022/VHN_DAP_200122.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 09.02.2022 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com