"என் அம்மாவுடன் சேர்ந்து சொந்தமாக படம் தயாரிக்கப் போகிறேன். தயாரிப்பு துறையில் எனக்கு அனுபவம் இல்லாவிட்டாலும், என்னுடைய அம்மா சரிகா நீண்ட காலமாக திரையுலகில் இருப்பதால், அவருக்கு தெரிந்தவர்கள் எங்களுக்கு ஆலோசனை கூறி உதவுவதாக சொல்லியிருக்கிறார்கள். நான் நடித்த பல படங்களில் தயாரிப்பாளர்கள் எனக்கு சம்பளமே தரவில்லை. நான் என்னுடன் பணியாற்றுபவர்களுக்கு நிச்சயம் பணம் கொடுப்பேன். நல்ல தயாரிப்பாளராக இருக்க விரும்புகிறேன்'' என்று பேட்டியொன்றில் கூறியிருக்கிறார் ஸ்ருதிஹாசன்.