"என்னுடைய கணவர் டைகர் பட்டோடி நவாப் அலிகான் பற்றிய வாழ்க்கை வரலாற்றை யார் தயாரிக்கிறார்கள் ? இயக்குவது யார்? என்பது பற்றி எனக்கு ஏதும் தெரியாது. சிறுவயதிலேயே அவர் தந்தையை இழந்தது, மன்னர் மானியத்தை இழந்தது, ஒரு கண் பார்வையை பறி கொடுத்தது. பார்வையற்ற கண்ணுடன் இந்திய அணிக்கு கேப்டனாக விளையாடியது என பல திருப்பங்களை கொண்டதாகும் அவரது வாழ்க்கை. எதிர்பாராதவிதமாக அவரைப் பற்றிய பல தகவல்கள் இல்லையென்றாலும், கிடைக்கும் தகவல்களை வைத்து சுவையான திரைக்கதையை உருவாக்கலாம். என்னைப் பொருத்தவரை அவருடன் வாழ்ந்த வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருந்தது'' என்கிறார் ஷர்மிளா தாகூர்.
- அருண்