கன்னடத்தில் "கிர்க் பார்ட்டி' படத்தின் மூலம் பிரபலமான நடிகை சம்யுக்தா ஹெக்டே, தமிழில் "பப்பி' என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார். "தமிழில் நடிக்க வாய்ப்புகள் வந்தாலும், எனக்கு பிடித்தவாறு கதைகள் ஏதும் அமையவில்லை. "காக்கா முட்டை' படத்திற்கு உதவி இயக்குநராக பணியாற்றிய நட்டுதேவ், முதன்முறையாக இயக்கும் "பப்பி' படத்தின் கதை எனக்கு பிடித்திருந்தது. எனக்கு நாய்கள் என்றால் மிகவும் விருப்பம். இந்த கதையில் ஒரு நாய்க்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதோடு, நாய் ஒன்றும் என்னுடன் நடிக்கிறது'' என்று கூறியுள்ளார் சம்யுக்தா ஹெக்டே.