"விளையாட்டு வீரர்கள் சர்வதேச அளவில் போட்டிகளில் பங்கேற்று ஒரு நிலையான இடத்திற்கு வந்த பின்னர், பொருளாதாரம், நிதி நிலையில் பின் தங்கியுள்ள முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு உதவுவது கடமையாகும். பிரச்னைகள் நிறைந்த இன்றைய வாழ்க்கையில் மனிதாபிமானத்தை மறந்து வருகிறோம். என்னுடைய சாதனை, கிடைத்த புகழ் அனைத்தும் நான் ஈடுபட்ட விளையாட்டில் ஒரு பகுதியாகும். ஒவ்வொரு நாளின் முடிவிலும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும். அன்பு செலுத்த வேண்டும் என்று நினைப்பதோடு என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன்'' என்று கூறுகிறார் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தலைவி மித்தாலி ராஜ்.