கொலு யோசனைகள்!

கொலு படிகளுக்கு வெள்ளை நிற துணியைவிட அடர் நிறமுள்ள துணிகளை விரித்தால் பீங்கான் கண்ணாடி பொம்மைகள் பளிச்சென்று தெரியும்.
கொலு யோசனைகள்!

• கொலுப் படிகளை ஒற்றைப் படையில் 3,5,7 என்று அமைத்து பொம்மைகளை அழகாக அடுக்க வேண்டும். படிகளில் பொம்மைகள் வைத்தபிறகு அவற்றுக்கு தெய்வாம்சம் வந்துவிடும். அதனால் வைத்தபின் எடுப்பதோ, இடம் மாற்றி வைப்பதோ கூடாது.

• கொலு படிகளுக்கு வெள்ளை நிற துணியைவிட அடர் நிறமுள்ள துணிகளை விரித்தால் பீங்கான் கண்ணாடி பொம்மைகள் பளிச்சென்று தெரியும்.

• கொலுப் படிகளின் பின்புறமுள்ள சுவரில் அழகான பெரிய பளபளக்கும் சுவாமி படங்களை மாட்டினால் தெய்வீகம் கமழும்.

• கொலுப் படிகளின் அடியில் தினமும் அழகான வண்ணக்கோலங்கள் போட்டால் அழகும் தெய்வீகமும் இணைந்திருக்கும்.

• தரையில் ஒரு விரிப்பைப் போட்டு அதில் மணல் பரப்பினால் கொலு முடிந்ததும் சுத்தம் செய்வது சுலபம்.

• குழிவான தட்டுகள், கிண்ணங்களில் நீர் நிரப்பி சிறு குளங்களை உருவாக்கலாம். 

• கொலு முடிந்தபின் பொம்மைகளை உள்ளே எடுத்து வைக்கும்போது அவற்றை பருத்தித் துணி அல்லது செய்தித் தாள்களில் சுற்றி வைக்க வேண்டும்.

• பாலியெஸ்டர் உடைகள் அல்லது பாலிதீன் கவர்களில் வைத்தால் காற்றோட்டமின்றி பொம்மைகளின் நிறம் மங்கி விடும்.

• கொலு வைத்துள்ள அறையில் ஜிகினாத்தாள்களை மாலைகளாக தொங்கவிட்டால் அறையே பளபளக்கும்.
- ஆர். ராமலட்சுமி

• விஜயதசமி தினத்தன்று பெருமாள் கோயில்களில் வன்னி மரக்கிளையை வைத்து அதில் பெருமாளை எழுந்தருளச் செய்து பூஜை நடத்துவார்கள். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள் விலகி ஓடி விடும்.

• ஈசனும், அம்மையும் ஒன்று சேர்ந்து ஊஞ்சலில் ஆடுகின்ற தரிசனத்தை 9 நாட்களும் கண்டால் நவராத்திரி பூஜை செய்தபலன் கிடைக்கும்.

• விஜயதசமி தினத்தன்று ஸ்ரீஆயுர் தேவியை போற்றி வழிபட வேண்டும். இதுதான் நவராத்திரி பூஜையின் நிறைவான பூஜையாகும்.

• நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும் இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும்.

• நவராத்திரி 9 நாட்களும் தினமும் பகலில் 1008 சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபட்டால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும்.

• நவராத்திரி நாட்களில் சுண்ணாம்பு மாவினால் கோலம் போடக்கூடாது. அரிசி மாவைப் பயன்படுத்திதான் கோலமிட வேண்டும். அவ்வாறு செய்வதால் குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும். சுண்ணாம்பு மாவு பயன்படுத்தினாலோ, எதிர்மறையான விளைவுகளே உருவாகும்.

• ஒன்பது நாட்களிலும் தேவியாக பாவித்துத் துதிக்க, நமக்குச் சொந்தமல்லாத, பிறர் வீட்டுக் குழந்தையையே அழைத்து வந்து உபசரிக்க வேண்டும். நம் வீட்டு அல்லது நம் உறவினர்களின் குழந்தைகளை தேர்ந்தெடுப்பது கூடாது.

• தினந்தோறும் நவராத்திரி பூஜையின் நிறைவாக, பலவிதமான மங்கலப் பொருட்களை (மஞ்சள், குங்குமம், வளையல்,ரிப்பன் போன்றவை) ஏழைகளுக்கு தானமாக அளிக்க வேண்டும்.

• தான தர்மங்கள்தான் நவராத்திரி பூஜைகளை நிறைவு செய்ய உதவிகின்றன. ஆகவே நவராத்திரியில் தானமளிப்பதே மிகமிக முக்கியம்.

• கன்னிப் பெண்களுக்குப் புதிய ஆடை முதலியவை பரிசாக அளிக்கப்படவேண்டும் என்பது நவராத்திரி விழாவின் முக்கிய அம்சமாகும்.

• சரஸ்வதி பூஜை என்ன கிழமையானாலும் கடலை சுண்டல் எதுவும் செய்ய முடியாதவர்கள் பழங்கள் கொடுக்கலாம்.

• நவதானியச் சுண்டல் நவக்கிரக நாயகர்களைத் திருப்திப்படுத்தும். கோள்களால் வரக்கூடிய துன்பங்களைத் தடுக்கும்.

• நவராத்திரி காலத்தில் முடிந்தவரை பாராயணம் செய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும்.

• நவராத்திரி விரதம் இருப்பவர்கள் தரையில் தான் படுத்து தூங்க வேண்டும்.

• அம்பிகை சங்கீதப் பிரியை. எனவே நவராத்திரி நாட்களில் தினமும் ஏதாவது ஒரு பாட்டாவது பாட வேண்டும்.

• நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்து போட்டால் அம்பாள் மனமகிழ்ந்து வருவார்.

• நவராத்திரி 9 நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால் ஐஸ்வர்யம் உண்டாகும்.

• கொலு வைத்திருப்பவர்கள் அதன் முன் நவக்கிரக கோலம் போட்டால் அம்பாள் அனுக்கிரகமும், நவக்கிரகப் பலன்களும் கிடைக்கும்.

• நவராத்திரி 9 நாட்களும் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, நைவேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

• நவராத்திரி தொடர்பான சுலோகம் மந்திரம் தெரியவில்லையா? கவலை படாதீர்கள் "ஓம் ஸ்ரீ லலிதா தேவியே நம' என்பதை 108 தடவை சொன்னாலே போதும். உரிய பலன் கிடைக்கும்.
- கவிதாபாலாஜிகணேஷ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com