அனுராக் பாசு இயக்கத்தில் 2007- ஆம் ஆண்டு வெளியான "லைப் இன் எ மெட்ரோ' படத்தின் தொடர்ச்சியில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற நடிகர் ராஜ்குமார் ராவுடன் நடிக்கும் வாய்ப்பு பரிநீதி சோப்ராவுக்கு (29) கிடைத்திருக்கிறது. "பல்வேறு பிரச்னைகள் கொண்ட ஒன்பது பேர், பொதுவான இடத்தில் சேரும்போது பகிர்ந்து கொள்ளும் ஆறு வித்தியாசமான கதைகளை கொண்ட "லைப் இன் எ மெட்ரோ'வின் இரண்டாவது பாகத்தில் நடிப்பதோடு, அனுராக் பாசு இயக்கத்தில் நடிக்க வேண்டுமென்ற என் ஆசையும் நிறைவேறியது மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்கிறார் பரிநீதி சோப்ரா.