2012-ஆம் ஆண்டு ரன்வீரை சந்தித்தபோது, "திருமணம் செய்து கொள்ளலாமா என்று அவர் என்னிடம் கேட்டபோது, ஏற்கெனவே பலமுறை என்னுடைய நம்பிக்கைகள் தோல்வியடைந்ததால் கால அவகாசம் கேட்டது உண்மை. பலத்த யோசனைக்கு பிறகே திருமணத்திற்கு ஒப்புக் கொண்டேன். திருமணத்திற்குப் பின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று கேட்டால், முன்பைவிட அதிக பாதுகாப்பு கிடைத்திருப்பதாகவே உணர்கிறேன். ஒரு நடிகை திருமணம் செய்து கொள்வதால் திரையுலகம் ஸ்தம்பித்து போவதில்லை. அதே சமயம் திருமணத்திற்கு பின் திரையுலகை விட்டு போக வேண்டுமென்ற அவசியமும் இல்லை'' என்கிறார் தீபிகா படுகோன்.
- அருண்