எஸ்.ஜே. சூர்யா நடித்த "கள்வனின் காதலி', "மச்சக்காரன்', "நந்தி' ஆகிய படங்களை இயக்கிய தமிழ்வாணன், தற்போது இயக்கும் "உயர்ந்த மனிதன்' படத்தில் முதன்முறையாக தமிழில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். 1988- ஆம் ஆண்டு வெளியான "படே மியான் சோட்டே மியான்' என்ற இந்திப் படத்தில் அமிதாப்பச்சனுடன் நடித்த ரம்யா கிருஷ்ணன், 21- ஆண்டுகளுக்குப் பிறகு "உயர்ந்த மனிதன்' படத்தில் அமிதாப்புடன் இணைந்து நடிக்கிறார். இந்தியிலும் வெளியாக உள்ள இந்தப் படத்திற்கு "தேரா யார் ஹூன் மெய்ன்' என பெயரிட்டுள்ளனர்.