பெங்களூரைச் சேர்ந்த வைஷ்ணவி சந்திரன் மேனன் முதன்முதலாக தமிழில் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் "பாண்டி முனி' என்ற படத்தில் அறிமுகமாக ஒப்பந்தமானார். ஆனால் அந்தப் படம் கைவிடப்பட்டது. இருப்பினும் யானையை மையமாக வைத்து எடுக்கப்படும் "வேட்டையன்' என்ற படத்திலும், ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி நடிக்கும் "மிருகம்' என்ற படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்ததில் வைஷ்ணவி மகிழ்ச்சியாக இருக்கிறார். இது தவிர கன்னடத்திலும் "நியூரன்' மற்றும் "ஸ்ரீமந்தா' ஆகிய படங்களிலும் நடித்து வரும் வைஷ்ணவி, தமிழில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார்.