இதிகாசப் பெண்களை அடிப்படையாக வைத்து குழந்தைகளுக்குகான கதைகளை எழுதி புத்தகமாக வெளியிடும் இன்போஸிஸ் நிறுவனரும், நிர்வாகத் தலைவருமான சுதாமூர்த்தி, 24 கதைகள் அடங்கிய நான்காவது தொகுப்பின் "தி டாட்டர்ஸ் ப்ரம் எ விஷ்ஷிங் ட்ரீ' என்ற புத்தகத்தை குழந்தைகள் தினத்தன்று வெளியிட்டுள்ளார். "இதிகாசத்தில் சீதா, திரௌபதி மட்டுமின்றி பல தியாகப் பெண்மணிகள் வெளி உலகுக்கு தெரியாமல் இருக்கிறார்கள். இவர்களைப் பற்றி குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் தெரிந்து கொள்ளவே இக்கதைகளை எழுதினேன். இதன் கடைசி ஐந்தாவது தொகுப்பு அடுத்த ஆண்டு வெளியாகும்'' என்றார் சுதா மூர்த்தி.