டிப்ஸ்.. டிப்ஸ்...

தோலால் செய்யப்பட்ட சூட்கேûஸ உபயோகிக்காமல் வைத்திருந்தால் அதனுள்ளே பூச்சி வரும். உபயோகமில்லாத சூட்கேஸில் ஒரு சோப்புத் துண்டை போட்டு வைக்கவும். பூச்சி வராது. நாற்றமும் வராது.
டிப்ஸ்.. டிப்ஸ்...

• தோலால் செய்யப்பட்ட சூட்கேûஸ உபயோகிக்காமல் வைத்திருந்தால் அதனுள்ளே பூச்சி வரும். உபயோகமில்லாத சூட்கேஸில் ஒரு சோப்புத் துண்டை போட்டு வைக்கவும். பூச்சி வராது. நாற்றமும் வராது.
• ரப்பர் பேண்ட் வைத்திருக்கும் டப்பாவில் சிறிது டால்கம் பவுடரைத் தூவி வைத்தால் அவை ஒன்றொடொன்று ஒட்டிக் கொள்ளாது.
• மிளகாய்த் தூள், கோதுமை மாவு போன்றவை மிஷினில் அரைத்தவுடன் சூடாக இருக்கும். இதனால் வீட்டிற்கு வந்ததும் காகிதத்தில் கொட்டிப் பரப்பிச் ஆறச் செய்து, பிறகு, டப்பாவில் நிரப்பி வைக்க வேண்டும்.
• சமையல் செய்யும்போது மேலே எண்ணெய் தெறித்து சுட்டுவிட்டால், அந்த இடத்தில் உருளைக் கிழங்கை அரைத்துப் பூசினால் எரியாது, கொப்பளிக்காது.
• புது துடைப்பம் வாங்கியதும், அதை உப்பு கலந்த நீரில் சிறிது நேரம் ஊற வைத்துவிட்டுப் பின் உலர வைத்துப் பயன்படுத்தினால் நீண்ட நாள் பயன்படுத்தலாம். 
- அமுதா சரவணன், அம்பத்தூர்.
• வாழை இலையைப் பின்பக்கம் தணலில் சிறிது காட்டி, பிறகு பார்சலில் கட்டினால் கிழியாது.
• கீரையை மசிக்கும்போது அதனுடன் உருளைக் கிழங்கு ஒன்றை தோல் சீவி, சிறு துண்டுகளாக வேக விட்டு மசித்தால் ருசியாக இருக்கும்.
• ரவா லட்டு பிடிக்கும்போது சிறிது ரோஸ் எஸன்ஸ் விட்டுச் செய்தால் மணமும் சுவையும் கூடும்.
• தோசை சூடும்போது கல்லில் மாவை ஊற்றிவிட்டு, மேல் பகுதியில் தேங்காயைத் துருவி தூவினால் தோசை சூப்பராக இருக்கும்.
• பிரட்டில் தடவ ஜாம் இல்லாவிட்டால், நெய்தடவி, அதன்மீது கொஞ்சம் தேனைத் தடவினால் சூப்பராக இருக்கும்.
• கொஞ்சம் அரிசி, கொஞ்சம் உளுந்தை மெஷினில் கொடுத்து மாவாக அரைத்து வைத்துக் கொண்டால், திடீர் என்று விருந்தினர் வந்து விட்டால் அதைக் கரைத்து திடீர் தோசை சுட்டு அசத்தலாம்.
• பழைய சாதத்தை வெள்ளைத் துணியில் கட்டி, இட்லி தட்டில் வைத்து சூடு படுத்தினால் சாதம் உதிர் உதிராக புதிதாக வடித்த சாதம் போல் இருக்கும்.
• வெண்டைக்காயை வதக்கும்போது சிறிது எலுமிச்சைச்சாறு விட்டு வதக்கினால் மொறு மொறுப்புடன் இருக்கும்.
- எம்.ஏ.நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி.
* எலுமிச்சை சில துளி தேவைப்படும்போது முழுப் பழத்தையும் அரிந்து வீணாக்காமல் சிறிய துளையிட்டுத் தேவையான அளவு சாறுபிழிந்து கொள்ளலாம்.
• காபி மேக்கரைத் கழுவும் போது நீருடன் எலுமிச்சைச்சாறு அல்லது வினிகரை விட்டு பின்பு ஸ்விட்சை ஆன் செய்யுங்கள் போதும். படுசுத்தமாகிவிடும்.
• கண்ணாடிப் பாத்திரங்களின் அடியில் கறைகள் இருந்தால் சில சொட்டு எலுமிச்சம் பழச்சாறு, சிறிதளவு தண்ணீர் கலந்து குலுக்கினால் கறைகள் நீங்கிவிடும்.
• தோசைக் கல், வாணலி இவைகளில் எண்ணெய்ப் பிசுபிசுவென்று பிடித்திருக்கும். சூட்டுடன் இருக்கும்போதே சிறிது எலுமிச்சைச்சாறு விட்டு தேங்காய் நாரினால் அழுத்தித் தேய்த்துக் கழுவினால் பிசுபிசுப்பு சட்டெனப் போய்விடும்.
- ஆர்.ராமலட்சுமி, திருநெல்வேலி. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com