பாலிவுட்டில் அதிக சம்பளம் பெறும் நடிகைகளில் ஒருவரான கரீனா கபூர் கான். தற்போது "டான்ஸ் இந்தியா டான்ஸ்' என்று டெலிவிஷன் நிகழ்ச்சிக்கு நடுவராக பொறுப்பேற்றுள்ளார். "கிளாசிகல் நடனம் கற்றுக் கொள்ளவில்லையே என்ற ஏக்கம் எனக்குள் உள்ளது. எங்கள் குடும்பத்தில் ராஜ்கபூர், ஷம்மி கபூர், சசி கபூர் அனைவருமே அவரவர் பாணியில் நடனமாடி ரசிகர்களை கவர்ந்ததுண்டு. இப்போது டான்ஸ் இந்தியா டான்ஸ் நிகழ்ச்சிக்கு நடுவராக இருப்பது உள்ளுக்குள் சற்று உதறலாக இருந்தாலும், என்னுடைய மனசாட்சிப் படி நியாயமாக சிறந்தவர்களை தேர்வு செய்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது'' என்று கரினா கபூர் கூறியுள்ளார்.