❖ கொஞ்சம் வசம்பை ரவா, மைதா உள்ள டப்பாவில் தட்டிப் போட்டு வைத்தால் பூச்சி, புழுக்கள் வராது.
❖ இஞ்சியின் தோலைச் சீவி விட்டு, அலசி சுத்தம் செய்துவிட்டு தயிரில் போட்டால் தயிர் நீண்ட நேரம் புளிக்கவே புளிக்காது.
❖ காய்ந்த மிளகாயை வறுக்கும்போது சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.
❖ பச்சை மிளகாயை காம்பை எடுத்து விட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் பசுமையாக இருக்கும்.
❖ தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக் கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்.
❖ தேங்காயை உடைத்தவுடன் கழுவிவிட்டு பின் பிரிட்ஜில் வைத்தால் அதில் பிசுபிசுப்பு ஏற்படாது.
❖ சர்க்கரையில் 5 கிராம்புகள் போட்டு வைத்தால் எறும்பு வராது... நீர்த்தும் போகாது.
❖ கட்லெட் செய்வதற்கு பிரெட் தூள் இல்லையா? பிரெட் ஸ்லைûஸ தவாவில் புரட்டி எடுத்து, மிக்ஸியில் உதிர்த்து உபயோகிக்கலாம்.
❖ ரசப்பொடி இல்லாத போது ரசம் வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் மிளகு சீரகத்துடன் ஒரு கரண்டி துவரம் பருப்பையும் வைத்து அரைத்துப் போட்டால் ரசம் சுவையாக இருக்கும்.
❖ அடைக்கு ஊறவைக்கும் அரிசி, பருப்புடன் சிறிது கொண்டைக்கடலையையும் ஊறவைத்து, அரைத்து அடை செய்தால் ருசியாக இருக்கும்.
- சரோஜா சண்முகம்