37 -ஆண்டுகளுக்கு முன் "சங்கிலி' படத்தின் மூலம் தன் தந்தை சிவாஜி கணேசனுடன் அறிமுகமான பிரபு, தற்போது 225 -ஆவது படமான "காலேஜ் குமார்' என்ற படத்தில் நடிக்கிறார். 1996-ஆம் ஆண்டு வெளியான "பாஞ்சாலங்குறிச்சி' என்ற படத்தில் பிரபுவுடன் நடித்த மதுபாலா, இப்போது மீண்டும் பிரபுவுடன் நடிக்கிறார். "கன்னடத்தில் வெளியான "அலிமாரி சந்து' என்ற படத்தின் தமிழ் ரீமேக்கான இதில் இன்றைய தலைமுறையினரை பெற்றோர்களும், பிள்ளைகளும் எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள் என்பதை நகைச்சுவையுடன் விளக்கும் இப்படத்தில் மீண்டும் பிரபுவுடன் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்கிறார் மதுபாலா.